நைஜீரியாவில் எண்ணெயை திருட முயன்றபோது ஏற்பட்ட விபத்து – 37பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வழியாக வெளியேறிய எண்ணெயை சுவாசித்த 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் குழு இன்று இந்த தகவலை வெளியிட்டது.
இருப்பினும், அதிகாரிகள் இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை.
இந்தச் சம்பவம் ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள ஒக்ரிகா என்ற இடத்தில் நடந்ததாக இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு மையம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெயைத் திருட முயன்றபோது பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டறியவும், உண்மைகளை உறுதிப்படுத்தவும் விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று ரிவர்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.




