உலகம்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில்  இன்று சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 1 மீட்டர் (3.28 அடி) உயர அலைகள் எழக்கூடும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto), நாகசாகி (Nagasaki), ககோஷிமா (Kagoshima), ஃபுகுவோகா (Fukuoka), சாகா (Saga), ஓயிட்டா (Oita)  மற்றும் மியாசாகி (Miyazaki) மாகாணங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

உலகிலேயே அதிக நிலநடுக்க அபாயம் உள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும்; அங்கு குறைந்தது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நில அதிர்வு ஏற்படுகிறது.

பசிபிக் படுகையை பகுதியளவு சூழ்ந்துள்ள எரிமலைகள் மற்றும் கடலடி அகழிகளைக் கொண்ட “நெருப்பு வளையத்தில்” அந்நாடு அமைந்துள்ளதால், உலகில் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களில் சுமார் 20 சதவீதம்  ஜப்பானில் நிகழ்கின்றன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்