ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் !

  • May 1, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள துவாப்சே (Tuapse) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது. துவாப்சே மீதான தாக்குதல்கள் சுற்றுச்சூழல் அவசரநிலைக்கு வழிவகுத்துள்ளன. அங்கு வசிப்பவர்கள் “பேரழிவு நிலைமைகள்” நிலவுவதாகவும், எண்ணெய் காற்று, மண் மற்றும் கருங்கடலை மாசுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ரஷ்ய ஆளில்லா விமானங்கள் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடெசாவைத் தாக்கியதில், குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 09 ஆம் திகதியன்று  வெற்றி தினக் கொண்டாட்டத்தை […]

உலகம் செய்தி

ஈரானால் இனி முடியாது: ஒப்பந்தம் செய்ய துடிக்கிறது என்கிறார் ட்ரம்ப்!!

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை செய்து கொள்ள ஈரான் அதிக விருப்பம் கொண்டுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “போர்நிறுத்தத்தை மீறுவதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களா?” என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போரை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் ஈரான் பாதுகாப்புப் படைகளின் திறன்களை கடுமையாகப் பலவீனப்படுத்தியுள்ளன. ஈரானின் கடற்படை அழிந்துவிட்டது. விமானப்படை அழிந்துவிட்டது. அதேபோல ஆளில்லா விமான […]

ஐரோப்பா செய்தி

லண்டனுக்கு கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தல்!

  • May 1, 2026
  • 0 Comments

கோல்டர்ஸ் கிரீனில் நடந்த கத்தி குத்து தாக்குதலை தொடர்ந்து  லண்டனுக்குக் கூடுதலாக 300 அதிகாரிகளை நியமிக்குமாறு பெருநகர காவல்துறை ஆணையர் சர் மார்க் ரௌலி (Sir Mark Rowley) கோரிக்கை விடுத்துள்ளார். யூத சமூகங்களை மையமாகக் கொண்ட ஒரு பிரத்தியேகமான காவல்நிலையத்தை நிறுவவும் அவர் முன்மொழிந்துள்ளார். மேலும் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் போன்ற கூடுதல் சிறப்பு வளங்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்புடைய செய்தி பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையாக […]

உலகம்

ஈரானுக்கு எதிராக புதிய இராணுவத் திட்டங்களை வகுக்கும் அமெரிக்கா!

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான புதிய இராணுவத் திட்டங்கள் குறித்த உயர்மட்ட விளக்கங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் (Brad Cooper) மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் (Dan Caine) ஆகியோரிடமிருந்து அவர் உயர்மட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளார். ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது சாத்தியமான “குறுகிய மற்றும் சக்திவாய்ந்த” தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் […]

செய்தி

“140 கோழிகளின் உயிரைப் பறித்த இசைக்கச்சேரி”

  • May 1, 2026
  • 0 Comments

இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் இசைக் கச்சேரியால் கோழிப்பண்ணையொன்றில் 140 கோழிகள் இறந்த பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இசைக் கச்சேரி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கச்சேரியின் அளவுக்கு அதிகமான ஓசையால் கோழிகள் மாரடைப்பால் இறந்தன எனத் தகவல் வெளியாகியுள்ளது. உ.பி.யில் திருமண நிகழ்ச்சியின் மாப்பிள்ளை ஊர்வலத்தில் டிஜே எனும் இசைக் கச்சேரி இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில் உ.பி.யின் சுல்தான்பூர் மாவட்டம், தரியாபூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் திகதி திருமண ஊர்வலம் டிஜே […]

உலகம்

வொஷிங்டனின் உயர்நிலை பாடசாலையில் கத்திகுத்து தாக்குதல்!

  • May 1, 2026
  • 0 Comments

வொஷிங்டனின் டகோமாவில் (Tacoma) உள்ள ஃபாஸ் ( Foss) உயர்நிலைப் பாடசாலையில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த  சம்பவத்தில் நான்கு மாணவர்கள், ஒரு வயதுவந்த பாதுகாவலர் மற்றும் சந்தேக நபர் உட்பட 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியும் மேற்படி சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் பாடசாலை […]

ஐரோப்பா

யூதர்கள் மீதான தாக்குதல் – நீதிமன்றத்தில் முன்னிலையாகும் தாக்குதல்தாரி!

  • May 1, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இடம்பெற்ற கத்துக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரி மீது  கொலைகுற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி 45 வயதான ஈசா சுலைமான் என்ற தாக்குதல்தாரி மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோமாலியாவை பூர்வீகமாகக் கொண்ட சுலைமான், சவுத்வார்க்கில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். மேலும் இன்றைய தினம் அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் (Westminster […]

அரசியல் இலங்கை செய்தி

அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • May 1, 2026
  • 0 Comments

“எதிரணி உறுப்பினர்கள் ஐந்து, பத்து பேர் வீதிக்கு இறங்குவதால் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். எனவே, அடுத்த பல வருடங்களுக்கு அதனை அசைக்க முடியாது.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மலையக மக்களுக்குரிய காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறுப்பும் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். நுவரெலியாவில் இன்று (01) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்தார். “மலையக பெருந்தோட்ட […]

உலகம் செய்தி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்போம்: லெபனான் பிரதமர் சபதம்!

  • May 1, 2026
  • 0 Comments

லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று லெபனான் பிரதமர் Nawaf Salam உறுதியளித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. “ லெபனானின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனானில் நிலையான தன்மையைக் கொண்டுவருவதற்கும், உண்மையான முன்னேற்றப் பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கும் தமது அரசு உழைக்கும் என்று Nawaf […]