அரசியல் இலங்கை செய்தி

அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஜனாதிபதி திட்டவட்டம்!

“எதிரணி உறுப்பினர்கள் ஐந்து, பத்து பேர் வீதிக்கு இறங்குவதால் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். எனவே, அடுத்த பல வருடங்களுக்கு அதனை அசைக்க முடியாது.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மலையக மக்களுக்குரிய காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக்கொடுப்பதற்குரிய பொறுப்பும் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

நுவரெலியாவில் இன்று (01) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு உறுதியளித்தார்.

“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு எமக்கு உள்ளது. இது விடயத்தில் காணி பிரச்சினை உள்ளது.

அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அவ்வாறு தீர்த்து காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்கும் அரசுதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்.

இந்த மண்ணில் தாத்தா உழைத்து கஷ்டப்பட்டார், அம்மா கஷ்டப்பட்டார். எனவே, அவர்களின் பிள்ளைகள் மீள்வதற்கு கல்விதான் சிறந்த வழி.

அதற்குரிய வளங்களை, வசதிகளை நிச்சயம் நாம் வழங்குவோம். தமிழ் மொழிமூல ஆசிரியர்களுக்கு உள்ள பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்.

நாம் ஆட்சிக்குவந்து ஒன்றரை வருடமே ஆகின்றது. இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது. மக்கள் அரசு பக்கம் நின்கின்றனர்.

இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாகும். இந்நாட்டை படிப்படியாகக் கட்டியெழுப்புவோம். இதற்குரிய திட்டம் எம் வசம் உள்ளது.

இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அதிகளவில் சிறைக்குச் செல்லும் வருடமாக 2026 அமையக்கூடும்.” எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!