ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்போம்: லெபனான் பிரதமர் சபதம்!
லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று லெபனான் பிரதமர் Nawaf Salam உறுதியளித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
“ லெபனானின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் நிலையான தன்மையைக் கொண்டுவருவதற்கும், உண்மையான முன்னேற்றப் பாதையில் நாட்டை வழிநடத்துவதற்கும் தமது அரசு உழைக்கும் என்று Nawaf Salam உறுதியளித்துள்ளார்.





