ஐரோப்பா

ரஷ்யாவின் தேடப்படும் நபர்கள் பட்டியில் பிரிட்டனின் முன்னாள் அமைச்சர்!

  • May 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸை ( Ben Wallace) ரஷ்யா தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பிருந்து ஆகஸ்ட் 2023 வரை வாலஸ் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார். அவர் பணியில் இருந்தபோது உக்ரைனுக்கு அதிகளவிலான இராணுவ உதவிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அத்துடன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபரில், கிரிமியா குறித்து வாலஸ் தெரிவித்த கருத்துகளுக்காக, அவரை சர்வதேச தேடப்படும் நபர்கள் […]

ஐரோப்பா

ukவில் ஆற்றில் இருந்து பெண்களின் உடல்கள் மீட்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்!

  • May 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பிரைட்டன் (Brighton) கடற்பகுதியில் இருந்து மூன்று பெண்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. மடீரா டிரைவ் (Madeira Drive) அருகே ஆற்றில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டதை சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியதுடன்  தலைமை கண்காணிப்பாளர் ஆடம் ஹேய்ஸ் (Adam Hays) இதனை ஒரு “சோகமான சம்பவம்” என விவரித்தார். பெண்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவும், என்ன நடந்தது என்பதன் சரியான சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவும், சிசிடிவி பகுப்பாய்வு உட்பட, விரைவான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவசர சேவைகள் தங்கள் பணியைத் […]

இலங்கை செய்தி

‘மீள்குடியேற்றம்’ – ஜுன் 15 ஆம் திகதிவரை காலக்கெடு!

  • May 13, 2026
  • 0 Comments

பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (13) பிற்பகல் பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அனர்த்த நிலைமையினால் பதுளை மாவட்டத்தில் 26,517 குடும்பங்களைச் சேர்ந்த 90,667 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 77 தோட்ட வீடுகளும் 507 கிராமிய வீடுகளும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. அதிக ஆபத்துள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமிய வீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, பதுளை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை […]

இலங்கை செய்தி

இலங்கை, பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • May 13, 2026
  • 0 Comments

பெலாரசுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை, பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ் (Maxim Ryzhenkov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது, பெலாரசும் இலங்கையும், தங்கள் உறவுகளை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஏற்கனவே உறுதியான பலன்களைத் தந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “பெலாரசுக்கும் இலங்கைக்கும் இடையே அண்மையில் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், […]

உலகம் செய்தி

உலக எரிசக்தி சந்தையின் செல்வாக்கை அமெரிக்கா அபகரிக்க முயல்கிறது -ரஷ்யா குற்றச்சாட்டு

  • May 13, 2026
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தித் துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான கொள்கைகள், உலக எரிசக்தி சந்தையின் செல்வாக்கை “அபகரிக்க” முயல்கின்றன என அவர் விமர்சித்துள்ளார். லுகோயில் மற்றும் ரோஸ்நெஃப்ட் போன்ற ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களை சர்வதேச சந்தைகளிலிருந்து வெளியேற்றுவதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ளார். அவர் RT இந்தியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா வெளியிட்ட சில கொள்கை ஆவணங்களில் உலக எரிசக்தி சந்தையில் […]

இலங்கை செய்தி

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டு சிறை! யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு

  • May 13, 2026
  • 0 Comments

ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழைப் பகுதியில் 1 கிராம் 440 மில்லிகிராம் (1.44 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற […]

ஐரோப்பா செய்தி

புதிய மசோதாக்கள் கொண்டு வரப்படும் – மன்னரின் விசேட அறிவிப்பு

  • May 13, 2026
  • 0 Comments

அரசு பொதுச் சேவைகள் மற்றும் கல்வி அமைப்பில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அடுத்த ஓராண்டுக்கான அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் மற்றும் சட்ட முன்னுரிமைகளை விளக்கும் தனது உரையிலேயே அவர் இதனைக் கூறினார். அரசின் செயல்திட்டத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த பின்னர், அமைச்சர்கள் அறிமுகப்படுத்த உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். அதில் முதன்மையாக, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. “பிரித்தானியாவின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், […]

செய்தி தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்

  • May 13, 2026
  • 0 Comments

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய தேர்வு முகமை நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2026 மே 3ஆம் திகதி நாடு முழுவதும் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் தேர்வு நடைபெற்றதுடன், சுமார் 1.4 இலட்சம் தமிழக மாணவர்கள் உட்பட மொத்தம் 22,05,035 பேர் இதில் பங்கேற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வினாத்தாள் […]

கருத்து & பகுப்பாய்வு

உலகின் முதல் இறகுகள் கொண்ட டைனோசர்கள் – சீனாவில் கண்டுப்பிடிப்பு!

  • May 13, 2026
  • 0 Comments

1996-ல் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தனித்துவமான புதைபடிவத்தின் மூலம், விஞ்ஞானிகள் டைனோசர்களைப் பற்றிய தங்கள் சிந்தனை முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளனர். இந்தப் புதைபடிவம், இறகுகள் கொண்ட டைனோசருக்கான உலகின் முதல் உறுதியான சான்று என்று கூறப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்பு, சில தொல்லுயிரியலாளர்கள் பறவைகள் டைனோசர்களிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என்று ஊகித்திருந்தனர். ஆனால், போதுமான சான்றுகள் இல்லாததால் இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்தது. இருப்பினும், இந்த சீனப் புதைபடிவத்தின் கண்டுபிடிப்பால், டைனோசர்களுக்கு இறகுகள் இருந்தன […]

இலங்கை செய்தி

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

  • May 13, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அல்லைப்பிட்டி சேமக்காலையில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில், உறவினர்களால் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி […]