ஐரோப்பா

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்கான உரிமை : லண்டன் உயர்  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • July 10, 2026
  • 0 Comments

பிரித்தானிய  உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்குபவர்கள்  தஞ்சம் கோருவதற்கான உரிமையை இரத்து செய்தது. பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட One in – One out ஒப்பந்தம் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடு சட்டவிரோதமானது என  லண்டன் உயர்  நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கிளைவ் ஷெல்டன், 2025-ஆம் ஆண்டில், ஆரம்பத்தில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கருதப்பட்டவர்களில் 79 சதவீதமானோர் மறுபரிசீலனையில் […]

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

பேச்சுகளை தொடருமாறு ஈரான் கோரிக்கை: ட்ரம்ப் தகவல்

  • July 10, 2026
  • 0 Comments

ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக 60 நாட்கள் போரை நிறுத்த இரு தரப்புகளும் இணங்கியிருந்தன. இந்நிலையிலேயே, அமெரிக்கா கடந்த 7ஆம்திகதி ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இவ்வாறானதொரு பின்னணியில்தான், […]

உலகம்

கத்தார் பரிசளித்த சொகுசு விமானத்தால் ட்ரம்புக்கு ஆபத்து?

  • July 10, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கத்தார் பரிசளித்த விமானத்தினால் ஆபத்து ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விமானத்தில் மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்புத் திறன்கள் இல்லாமல் இருக்கலாம் என்றும், அதனை திருத்தி அமைக்க சுமார் 01 பில்லியன் டொலர் செலவாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த விமானத்தை அமெரிக்காவிற்கு வெளியே இயக்குவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன்  குறித்த விமானத்தை அனைத்து வித பாதுகாப்புடனும் சீரமைக்க  ஓராண்டு கால மறுசீரமைப்புப் […]

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா செய்தி

40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து சென்ற ‘இந்திய பிரதமர்’: வரலாறுகாணாத வரவேற்பு

  • July 10, 2026
  • 0 Comments

இரு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூசிலாந்து சென்றடைந்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆரத்தழுவி வரவேற்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். கடந்த 40 […]

உலகம்

”பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி” : 60 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பாணை

  • July 10, 2026
  • 0 Comments

பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி குறித்து கலந்துரையாட 60 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அழைப்புப் பட்டியலில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள், இந்தியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது பயங்கரவாதத்தின் மீள் எழுச்சி தொடர்பிலும், உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் விசேடமாக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் […]

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செய்தி

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை

  • July 10, 2026
  • 0 Comments

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ -சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் […]

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது வாரமாகவும் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். செய்தி

சொந்த மண்ணை மீட்க யாழில் 12 ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

  • July 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது வாரமாகவும் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி, மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இராணுவத்தின் கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில், அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், […]

ஐரோப்பா

ஸ்பெயின் காட்டுத்தீ – பிரித்தானியர்கள் நால்வர் உயிரிழப்பு

  • July 10, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 04 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியுறவு அலுவலகம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. காட்டுத்தீயில் சிக்கி எரிந்துபோன கார் ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நால்வர் பிரித்தானிய பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி ஸ்பெயினில் காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ஐரோப்பா

ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற காளை ஓட்டத் திருவிழா – 09 பேர் காயம்

  • July 10, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் காளை ஓட்டத் திருவிழா இன்று பம்ப்ளோனாவின் (Pamplona) தெருக்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்ற நிலையில், 09 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்வு இரவு முழுவதும் தொடர்ந்தது. வாணவேடிக்கைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற நிலையில் ஏராளமான மக்கள் ஒன்றுக்கூடி நகரமே களைக்கட்டியது. இந்நிலையில் இந்த ஓட்டத்தில் பங்கேற்ற வீரர்கள் 09 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 05 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நவாரா பல்கலைக்கழக மருத்துவமனை […]

ஐரோப்பா

பிரதமராக கடைசி ஒருவாரக் காலம் – ஸ்டாமரின் இறுதி திட்டங்கள்

  • July 10, 2026
  • 0 Comments

சர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமராக தனது கடைசி முழு வாரத்தை பாரிஸில் கழிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக அவர் மேற்கொள்ளும் கடைசி வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த விஜயத்தின்போது ​​உக்ரைனுக்கான பாதுகாப்பு ஆதரவை ஒருங்கிணைப்பதற்காக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து அவர் நிறுவிய ‘விருப்பமுள்ளவர்களின் கூட்டணி’யின் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். பிரான்சில் தனது உத்தியோகப்பூர்வ கடமைகளை நிறைவு செய்யும் விதமாக, செவ்வாய்க்கிழமை மற்ற உலகத் தலைவர்களுடன் இணைந்து பாஸ்டில் தின நினைவு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். ஆண்டி பர்ன்ஹாம் […]