T -20 தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது மே.தீவுகள்!
இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது மற்றும் இறுதி T – 20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 169 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
ஷமார் ஜோசப் oseph 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் வீழ்த்தி இலங்கை அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார். ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை அணி சார்பில் பதும் நிஸ்ஸங்க 26 ஓட்டங்களைப் பெற்ற வேளையில், மிடில் ஆர்டரில் துணிச்சலாக விளையாடிய துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 43 ஓட்டங்களை விளாசி அணிக்கு வலு சேர்த்தார்.
வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஜோசப் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இலங்கை அணி 169 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.
வெற்றியிலக்கை நோக்கிப் பயணித்த மேற்கிந்திய தீவுகள் அணி, ஷாய் ஹோப்பை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி இக்கட்டான நிலையில் இருந்தது.
எனினும், அணித் தலைவர் ரோவ்மன் பவல் (33 ஓட்டங்கள்) மற்றும் Sherfane Rutherford இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டனர்.
துஷ்மந்த சமீர வீசிய பரபரப்பான 17ஆவது ஓவரில் பவல் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் நோ-பால், வைட் என மொத்தம் 24 ஓட்டங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குக் கிடைத்தன.
இறுதி 2 ஓவர்களில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, 19ஆவது ஓவரில் ஜேசன் ஹோல்டர் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திருப்பினார்.
ஹோல்டர் 5 பந்துகளில் 21 ஓட்டங்களுடனும், Sherfane Rutherford 40 பந்துகளில் 54 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
Rutherford கொடுத்த இரண்டு பிடியெடுப்பு வாய்ப்புகளை இலங்கை வீரர்கள் தவறவிட்டமை அவர்களுக்குப் பின்னடைவாக அமைந்தது.
ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 1-0 எனத் தன்வசப்படுத்தியிருந்த நிலையில், தற்போது T20 தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 25ஆம் திகதி அன்டிகுவாவில் ஆரம்பமாகவுள்ளது.




