10 லட்சம் ஆதரவாளர்களை திரட்ட தயாராகிறது எதிரணி: NPP அரசுக்கு எதிராக வியூகம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனவே, நாட்டு மக்களுக்கு […]













