இலங்கை

இலங்கையில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு

  • July 11, 2026
  • 0 Comments

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA)  இன்று காலை புறப்பட்டு இஸ்தான்புல்லுக்கு சென்றுக்கொண்டிருந்த விமானம் அவசர தரையிறக்கத்தை அறிவித்துள்ளது. குறித்த விமானத்தின்மீது பறவை மோதியதன் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எரிபொருளை நிறைவு செய்யும் வகையில் நீர்கொழும்புக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் குறித்த விமானம் வட்டமடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் 240இற்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

1000 ஆண்டுகள் பழைமையான பேயக்ஸ் திரைச்சீலை பிரித்தானியாவில்

  • July 11, 2026
  • 0 Comments

பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலை நேற்றைய தினம் பிரித்தானியாவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நன்றிக்கூறியுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கலைப்படைப்பு, பிரான்சில் உள்ள ஒரு ரகசிய இடத்திலிருந்து, அதி உச்ச பாதுகாப்புடன் குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனம் மூலம்  பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்பட்டது. பிரித்தானிய அருங்காட்சியகம், டோவரின் வெள்ளைப் பாறைகளின் மீது ‘மெர்சி’ (நன்றி) என்ற வார்த்தையுடன் கூடிய அதன் பிம்பத்தை ஒளிபரப்பி அந்தத் திரைச்சீலையை வரவேற்றது. 1066-ஆம் ஆண்டின் நார்மன் (Norman) படையெடுப்பைச் சித்தரிக்கும் இந்தத் […]

ஐரோப்பா

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதா ஜோர்ஜியா? புறக்கணித்த நேட்டோ நாடுகள்

  • July 11, 2026
  • 0 Comments

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்கு  ஜோர்ஜிய அரசாங்கம் அழைக்கப்படாததால் அந்நாடு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டணியின் நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒரு முக்கிய கூட்டாளி நாடு விலக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முந்தைய உச்சிமாநாடுகளைப் போலவே, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நேட்டோ கூட்டாளி நாடுகளும், உக்ரைனும் பிராந்தியப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அங்காராவிற்கு அழைக்கப்பட்டன. ஆனால், முதல் முறையாக, நேட்டோவின் முன்னாள் […]

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மரண வாக்குமூல எச்சரிக்கை

  • July 11, 2026
  • 0 Comments

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தன்னைக் கொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி வருவதாக இஸ்ரேல் தன்னிடம் எச்சரித்ததாக வெளியான செய்திகளுக்குப் பிறகு, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போதே டிரம்ப் இதனைத் தெரிவித்தார். “நான் நீண்ட காலமாகவே அவர்களின் இலக்குப்பட்டியலில் இருந்து வருகிறேன்,” என்று டிரம்ப் கூறினார். “ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், […]

திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது இலங்கை செய்தி

திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது

  • July 11, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சுத்திகரிப்பு பெண் ஊழியரொருவர் ஹொரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சுத்திகரிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த ஊழியரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 36 கிரேம் 180 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. திருகோணமலை என்சி வீதியில் வசித்து வந்த குறித்த […]

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து கொலம்பியா அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் ஜமிண்டன் காம்பாஸிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து, இந்த மிரட்டல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றம்: கொலம்பியா வீரருக்கு மரண அச்சுறுத்தல்

  • July 11, 2026
  • 0 Comments

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து கொலம்பியா அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் ஜமிண்டன் காம்பாஸிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து, இந்த மிரட்டல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “விளையாட்டு அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எந்தவொரு வீரரோ அல்லது அவர்களது நெருங்கிய வட்டத்தில் உள்ள எவருமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது,” என்று கொலம்பியா கால்பந்து கூட்டமைப்பு (FCF தெரிவித்துள்ளது. 16-வது சுற்று ஆட்டத்தில் (round of 16) சுவிட்சர்லாந்திடம் பெனால்டி ஷூட்-அவுட் […]

ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. செய்தி விளையாட்டு

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்

  • July 11, 2026
  • 0 Comments

ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டியின் 88-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணியின் மாற்று இலக்குக் காவலர் (goalkeeper) சென்னே லாம்மென்ஸ் தடுத்தாடிய பந்தை மீட்டு, மைக்கேல் மெரினோ ஸ்பெயினின் வெற்றி கோலை அடித்தார். ஸ்பெயின் அணிக்காகத் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் மெரினோ கடைசி நேர நாயகனாக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், டல்லாஸில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், இந்தத் தொடரின் விருப்பமான அணியாகக் கருதப்படும் பிரான்ஸை […]

ஐரோப்பா

பிரான்ஸில் 09 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • July 11, 2026
  • 0 Comments

பிரான்ஸில் அடுத்த வாரம் கடுமையான வெப்ப அலை நீடிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் “ஓர்செக் தீவிர வெப்பத் திட்டத்தை” செயல்படுத்தும் என நேற்று அறிவித்துள்ளது. குறிப்பாக சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ள மாகாணங்களுக்கு இந்த வெப்பத் திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள ஒன்பது மாகாணங்கள் தீவர வெப்பநிலைக்குரிய சிவப்பு எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 72 மாகாணங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன என்று தேசிய வானிலை முன்னறிவிப்பாளரான […]

இலங்கை

கந்தளாயில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

  • July 10, 2026
  • 0 Comments

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவலின்படி, ஜெயந்திபுர பகுதியில் இருந்து பேராறு பகுதியை நோக்கி களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம், போட்டங்காட்டு சந்தியில் கந்தளாயில் இருந்து வான்எல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் […]

இலங்கை

கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்

  • July 10, 2026
  • 0 Comments

கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு கைதிகள் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.  இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.