உலகம்

நெதன்யாகுவைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைக் கோரும் துருக்கி

தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைக் கோரப்போவதாக துருக்கி அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற ஆர்வலர்கள் மீதான தாக்குதல் தொடர்பான உள்நாட்டுக் குற்றவியல் வழக்கின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் மிகக் கடுமையான விமர்சகர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

மேலும், அங்கு நடக்கும் போர் தொடர்பாக நெதன்யாகுவிற்கு எதிராக இதற்கு முன்னர் உள்நாட்டுக் கைது வாரண்டுகளையும் பிறப்பித்திருந்தது.

இருப்பினும் துருக்கி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்

ரெட் நோட்டீஸ் Red notice என்பது, நாடு கடத்தப்படும் வரை ஒருவரைக் கண்டுபிடித்து தற்காலிகமாகக் கைது செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள காவல் படைகளுக்கு விடுக்கப்படும் ஒரு கோரிக்கையாகும்.

ரெட் நோட்டீஸ்களை வெளியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பு, உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் கோரிக்கைகளை இன்டர்போல் மதிப்பாய்வு செய்யும்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்