இலங்கையில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) இன்று காலை புறப்பட்டு இஸ்தான்புல்லுக்கு சென்றுக்கொண்டிருந்த விமானம் அவசர தரையிறக்கத்தை அறிவித்துள்ளது.
குறித்த விமானத்தின்மீது பறவை மோதியதன் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எரிபொருளை நிறைவு செய்யும் வகையில் நீர்கொழும்புக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் குறித்த விமானம் வட்டமடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விமானத்தில் 240இற்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




