இலங்கை செய்தி

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்!

  • June 3, 2026
  • 0 Comments

வவுனியா, குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இக்கோரச் சம்பவத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று செவ்வாய்க்கிழமை குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்ததில், அதில் சிக்குண்டு அந்த இளைஞர் சம்பவ […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 8 என்புத் தொகுதிகள் அடையாளம்!

  • June 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றைய அகழ்வின் போது குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், சிறுவர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்படப் புதிதாக 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் […]

ஐரோப்பா

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா!!

  • June 2, 2026
  • 0 Comments

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்குமாறு நிதி அதிகாரிகள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் நிதி அமைச்சகம் கணிசமான நிதி பற்றாக்குறையை  எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 28 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி வரம்பு மீறப்படும் என்றும், வரும் ஆண்டுகளிலும் மேலும் செலவு அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ், (Anton Siluanov) கணித்துள்ளார். போர் […]

உலகம்

தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை பாதுகாக்க ரோபோக்களை களமிறக்கும் தைவான்!

  • June 2, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை பாதுகாக்கும் நோக்கில் மூன்று ரோந்து ரோபோ நாய்களை தைவான் வடிவமைத்துள்ளது. தைவான் இராணுவத்தின் உயர்மட்ட ஆயுத மேம்பாட்டு நிறுவனம் இன்று இந்த நாய்களை காட்சிப்படுத்தியது. உளவு, கண்காணிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுப் பதிப்புகளை கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவின் பின் புறம் துப்பாக்கியொன்றும் வைக்கப்பட்டுள்ளது. தைவான் தனது ஒருங்கிணைந்த பகுதிய என சீனா நீண்டகாலமாக கூறி வருகிறது. தேவைப்பட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் புறக்கணிக்கவில்லை. இந்நிலையில் தைவானுக்கு […]

உலகம்

கென்யாவில் மக்கள் போராட்டம் : இருவர் மீது துப்பாக்கிச்சூடு!

  • June 2, 2026
  • 0 Comments

கென்யாவில் எபோலா தனிமைப்படுதல் கூடாரங்களை அமைக்க அமெரிக்கா தயாராகி வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கென்யாவின் நன்யூகி (Nanyuki) நகரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர், “தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது” சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் அதிகாரிகள் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இதேவேளை நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் […]

ஐரோப்பா

வாட்ஸ்அப் உரையாடல்கள் – புதிய சர்ச்சையில் சிக்கிய ஸ்டாமர்!!

  • June 2, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் வாட்ஸ்அப்பில் (WhatsApp) தானாகவே மறையும் செய்தி அம்சத்தைப் பயன்படுத்துவதாக டவுனிங் தெரு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால்  ‘மாண்டல்சனுடனான உரையாடல்களை பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பயனர்கள் செய்திகளை 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தானாகவே மறையுமாறு அமைக்க அனுமதிக்கிறது. இதன் பொருள், பிரதமருக்கும் மாண்டல்சனுக்கும் இடையேயான கடந்தகால உரையாடல்களை இனி மீட்டெடுக்க முடியாது என்பதாகும். மாண்டல்சனின் பதவி நியமனம் குறித்து வெளியிடப்பட்ட கோப்புகளில்,   iMessage […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் : நோர்வே வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

  • June 2, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதி கைப்பற்றப்பட்டால், லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளும் உள்ளதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். நோர்வேயின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டத்திற்கும் இடையே உள்ள சுமார் 400 மைல் அகலமுள்ள பகுதியை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் முகாமிட்டுள்ள ரஷ்யாவின் சக்திவாய்ந்த வடக்குக் […]

உலகம் செய்தி

பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் சாதனை படைத்த இஸ்ரேல்!

  • June 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $19.2 பில்லியன் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதைய போர்க்களங்களில் இந்தத் தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதால், சர்வதேச அளவில் இவற்றுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பா மற்றும் […]

இந்தியா

இந்தியாவில் 116-118°F வெப்பநிலை பதிவு!! இரவில் பணிப்புரியும் மக்கள்!

  • June 2, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே மாதம் முழுவதும் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு 47-48°C (116-118°F) அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் இந்தியாவில் அதிஉச்சபட்ச வெப்பநிலை பதிவான மாநிலமாக உத்தரப் பிரதேச மாநிலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பலர் கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்கின்ற நிலையில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஏற்ப மக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் உச்சபட்ச வெப்பநிலை காரணமாக மக்கள் தங்களின் அன்றாட செற்பாடுகளை இரவு நேரத்திற்கு மாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் கொழும்பு வந்தன!

  • June 2, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படைக்கு, அமெரிக்கா கடற்படையால் வழங்கப்பட்ட TH-57 ‘Sea Ranger பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர்கள் தற்போது, இரத்மலானவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தொழில்நுட்பக் கட்டமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர், இவை சேவையில் சேர்க்கப்பட்டு செயற்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த உதவியானது இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க […]