உலகம்

புலம்பெயர்ந்தோரைத் தாயகம் அனுப்ப உதவும் வழக்கறிஞர்களுக்கு நிதி வெகுமதி! இத்தாலியில் சர்ச்சை!

  • April 22, 2026
  • 0 Comments

புலம்பெயர்ந்தோரைத் தாயகம் அனுப்ப உதவுகின்ற வழக்கறிஞர்களுக்கு நிதியளிக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரை தாமாக முன்வந்து தாயகம் திரும்ப உதவும் வழக்கறிஞர்கள் அரசாங்கத்தின் நிதி வெகுமதியை பெறுவார்கள். இந்த செயன்முறை வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே குறித்த நிதி வெகுமதி வழங்கப்படும். தொடர்புடைய சட்டமூலம் இந்தவாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. இருப்பினும் குறித்த நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சங்கங்கள் கண்டித்துள்ளனர். […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஈரான் போர் – இங்கிலாந்தின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • April 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் பிப்ரவரியில் 3.0% ஆக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய பணவீக்க நிலையானது ஈரான் போர் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்தப் போர், தொடர்ந்தால்  பணவீக்கம் மீண்டும் உயர  வழிவகுக்கும் என்று இங்கிலாந்து வங்கி கவலை கொண்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, தொழிற்சாலை விலைகளும் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளன. பெரும்பாலும் எரிபொருளால் ஏற்பட்ட இந்த விலை உயர்வுகள், வட்டி விகிதங்களை உயர்த்தத் […]

உலகம் செய்தி

ஈரானில் தாக்குதலுக்கு இலக்கான 1,300 பாடசாலைகளில் 50 வீதமானவை சீரமைப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களினால் ஈரானில் சேதமடைந்த 1,300 பாடசாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அலிரேசா கசெமி Alireza Kazemi தெரிவித்தார். கடுமையாக சேதமடைந்த பாடசாலைகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். போர்ச் சூழலால் தொலைக்காட்சி மற்றும் இணையவழி ஊடாக ஈரான் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

ஈரானில் 54 ஆவது நாளாக தொடரும் இணைய முடக்கம்!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானில் இணையத்தள முடக்கம் இன்று 54 ஆவது நாளாக தொடர்கின்றது. இது அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டில் வெடித்த போராட்டங்களால் ஆரம்பத்தில் இணையத்தள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் போர்ச் சூழலால் அது மேலும் தீவிரமடைந்துள்ளது. சுமார் 1272 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தடையால் பல வணிக நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ளன. ஷஇணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஈரானியர்கள் உலகத்தொடர்பு இன்றி பெரும் […]

இலங்கை செய்தி

சைவ சமயத்தை நெறிப்படுத்த தனிப்பீடம் அவசியம்!

  • April 22, 2026
  • 0 Comments

சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான இன்று (22.04.2026) புதன்கிழமை காலை நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , […]

இலங்கை

‘சொக்கா மல்லி’ பிணையில் விடுவிப்பு

  • April 22, 2026
  • 0 Comments

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர என்ற ‘சொக்கா மல்லி’, சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை

இலங்கைக்குக் கைகொடுத்த பிலிப்பைன்ஸ்!

  • April 22, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மையில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் (Nina P. Cainglet), இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளத்தில் அறிவித்துள்ளார். அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய […]

உலகம்

இடப்பெயர்வு முயற்சியில் 8000 பேர் பலி : IOM தகவல்!

  • April 22, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு இடம்பெயர்வுப் பாதைகளில் கிட்டத்தட்ட 8,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இதில் ஐரோப்பாவிற்கான கடல் வழிப் பாதைகளே மிகவும் ஆபத்தானவையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) நேற்று வெளியிட்ட அறிக்கையில் புதிய புள்ளிவிபரங்களுடன் இந்த விடயத்தை  சுட்டிக்காட்டியுள்ளது. அவ் அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் “கண்ணுக்குத் தெரியாத கப்பல் விபத்துகளில்” தொலைந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 82,000-ஐத் தாண்டியுள்ளது என்றும்,  சுமார் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒருவர் பலி!

  • April 22, 2026
  • 0 Comments

வடக்கு காசாவில் Jabalia பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். போரினால் சிதைந்த தமது வீட்டின் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போரினால் ஏற்கனவே முற்றிலும் அழிந்துபோன ஒரு பகுதியிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காசாவில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கின்றது என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. போர் நிறுத்தத்தைமீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரத்துக்கு […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநரை சந்தித்தார் பலாலி விமானப்படை தளபதி!

  • April 22, 2026
  • 0 Comments

பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் டி.எஸ்.எஸ்.சுரங்க செனவிரத்ன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்று இன்று (22.04.2026) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இருவருக்குமிடையே மிகவும் சுமுகமான முறையில் அமைந்திருந்த இந்தச் சந்திப்பில், சமகால நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கலந்துகொண்டிருந்தார்.

error: Content is protected !!