ஈரானில் 54 ஆவது நாளாக தொடரும் இணைய முடக்கம்!
ஈரானில் இணையத்தள முடக்கம் இன்று 54 ஆவது நாளாக தொடர்கின்றது.
இது அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டில் வெடித்த போராட்டங்களால் ஆரம்பத்தில் இணையத்தள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் போர்ச் சூழலால் அது மேலும் தீவிரமடைந்துள்ளது.
சுமார் 1272 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தடையால் பல வணிக நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ளன.
ஷஇணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஈரானியர்கள் உலகத்தொடர்பு இன்றி பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.




