ஈரானில் தாக்குதலுக்கு இலக்கான 1,300 பாடசாலைகளில் 50 வீதமானவை சீரமைப்பு!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களினால் ஈரானில் சேதமடைந்த 1,300 பாடசாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அலிரேசா கசெமி Alireza Kazemi தெரிவித்தார்.
கடுமையாக சேதமடைந்த பாடசாலைகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
போர்ச் சூழலால் தொலைக்காட்சி மற்றும் இணையவழி ஊடாக ஈரான் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




