செய்தி

ஈரான் தலைநகரில் அணு விஞ்ஞானிகளை குறிவைத்து தாக்குதல்

  • June 13, 2025
  • 0 Comments

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் தீவிர இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. தலைநகர் முழுவதும் பல வெடிப்புகள் நடந்துள்ளன, மேலும் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் வேகமாக முன்னேறி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேல் அதன் ஆரம்ப தாக்குதல்களில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் மற்றும் மூத்த அணு விஞ்ஞானிகளை குறிவைத்துள்ளது. இதன் விளைவாக, சில மூத்த ஈரானிய அதிகாரிகள் “ரகசிய இடங்களுக்கு” மாற்றப்பட்டுள்ளனர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அறிமுகமானது போர்டபிள் சார்ஜர்! அறிய வேண்டிய 10 அம்சங்கள்

  • June 13, 2025
  • 0 Comments

இதுவரை வந்திருக்கும் எத்தனையோ சார்ஜர்களை விட இந்த போர்டபிள் சார்ஜர் பலருக்கும் மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டது. காரணம்.. பத்து பொருத்தமும் பக்காவாக இருப்பதுதான். சார்ஜர் சந்தையில் இந்த போர்டபிள் சார்ஜர் நிச்சயம் ஒரு புதிய வரவாக அமைந்திருக்கும். ஸ்நேப்-என்-சார்ஜர் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும். வேறெதுவும் தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு வசதியாக இருக்கிறது. சந்தைக்கு வந்து விற்பனையில் சாதனை படைத்து வரும் இது, பவர் பேங்குகளை எல்லாம் ஓரங்கட்டிவிடும். இந்த ஸ்நேப்-என்-சார்ஜரை செல்போனில் அப்படியே இணைத்துவிடலாம். […]

செய்தி

கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபருக்கு நேர்ந்த கதி

  • June 13, 2025
  • 0 Comments

கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யூடியூபரான 31 வயதான ஆல்பர்ட் ஓஜ்வாங், காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்ததாக கூறி போராட்டங்கள் வெடித்தன. நைரோபியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர். காவல்துறை அதிகாரியை விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டதாக ஆல்பர்ட் ஓஜ்வாங் கைது செய்யப்பட்டார். சிறை கம்பியில் தலையை மோதிக்கொண்டதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்ற போலீசாரின் விளக்கத்தை ஏற்க ஓஜ்வாங் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர்.

உலகம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் இராணுவத் தளபதி மரணம்

  • June 13, 2025
  • 0 Comments

ஈரானின் அணுவாயுதத் தளத்தைத் தாக்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. ஈரான் சில நாட்களிலேயே 15 அணுக்குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான வளங்களைக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கூறினார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் குடியிருப்பு வட்டாரங்கள் உட்படப் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகம் கூறியது. தாக்குதல் நடான்ஸ் நகரிலுள்ள அணுவாயுதத் தளத்தில் நடந்தது என்று ஊடகம் கூறியது. தாக்குதலில் ராணுவத் தளபதி ஹுசேன் சலாமியும் அணுச்சக்தி விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஈரானிடமிருந்து […]

விளையாட்டு

43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்

  • June 13, 2025
  • 0 Comments

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 56.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பியூ வெப்ஸ்டர் 72 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் […]

மத்திய கிழக்கு

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்

  • June 13, 2025
  • 0 Comments

ஈரானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேலின் அணுசக்தி தொடர்பான ரகசியங்களை திருடியுள்ளதாக ஈரான் சமீபத்தில் கூறியது. அணுசக்தி ஒப்பந்தத்தில் நல்ல முடிவு ஏற்படாவிட்டால், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை துவக்கியது. இதனால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள் அதிகரித்து […]

உலகம்

ஏர் இந்தியா விபத்து – போயிங் 787 விமானங்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

  • June 13, 2025
  • 0 Comments

ஏர் இந்தியா விபத்தையடுத்து போயிங் 787 ரக விமானத்தைச் சேவையிலிருந்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. எனினும் தற்போது அதனை நிறுத்த தேவை ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து அமெரிக்காவின் போக்குவரத்து அமைச்சர் ஷொன் டபியும் மத்திய விமானத்துறை நிர்வாகத் தலைவர் கிரிஸ் ரோஷேலியுவும் செய்தியாளர் கூட்டத்தில் அவ்வாறு கூறினர். விமானங்களை உடனடியாக நிறுத்தும் தேவையைக் குறிக்கும் எந்தப் பாதுகாப்பு தரவும் வெளிவரவில்லை என்று […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

  • June 13, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளுக்கான புதுப்பிக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 5 மில்லியன் டொலர் விசா விண்ணப்பிக்க இணையத்தளம் அறிமுகம்

  • June 13, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் 5 மில்லியன் டொலர் மதிப்புள்ள குடியிருப்பாளர் அனுமதி விசாவுக்கு விண்ணப்பிக்கப் புதிய இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. TrumpCard.gov. எனும் இணையப்பக்கத்தில் விசா அனுமதிக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். எனினும் விசா அனுமதி வழங்கும் செயல்முறை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் ஆர்வமுள்ளோர் தங்களது விவரங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய விசா அனுமதி, வழக்கமாக வழங்கப்படும் விசாவை விட மதிப்புமிக்கது. அதன் வழி அமெரிக்காவில் குடியேறுவோர் புதிய வேலைகளை […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

கண்திறந்தால் என்னைச் சுற்றி சடலங்கள் – ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் அனுபவம்

  • June 13, 2025
  • 0 Comments

இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி உயிர் பிழைத்துள்ளார். “கண்திறந்து பார்த்தால் என்னைச் சுற்றி சடலங்களும் விமானச் சிதைவுகளும் இருந்தன. நான் பீதியடைந்தேன். எழுந்து ஓடிவிட்டேன்” என்றார். 242 பேர் இருந்த விமானத்தில் இருவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உயிர்பிழைத்த பிரிட்டிஷ் நாட்டவரான 40 வயது விஷ்வகுமார் ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தியாவில் உறவினர்களைச் சந்தித்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிக்கொண்டிருந்த அவர், விமானம் புறப்பட்டு 30 விநாடிகளில் பெரிய சத்தம் கேட்டதாகவும் அதன் […]