மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அருகிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக அருண் ஹேமசந்திரா குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் தமது பேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் இலங்கைப் பிரஜைகளுக்கு ஆதரவளிக்க மத்திய கிழக்கில் உள்ள […]













