இலங்கை செய்தி

நல்லூர் தேர்த்திருவிழா (புகைப்பட தொகுப்பு)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று (09) பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று (09) பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை முதலே நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழிந்தன.

காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 7.00 மணியளவில் முருகப்பெருமான் பக்தர்களின் அரோகரா முழக்கங்களுக்கு மத்தியில் நல்லூரான் திருத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர், காலை 7.30 மணியளவில் திருத்தேரின் வடம் பிடித்து . ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுக்க, “அரோகரா! அரோகரா!” என்ற பக்தி முழக்கங்கள் நல்லூர் நான்கு வீதிகளிலும் எதிரொலித்தன.

தேரில் எழுந்தருளிய நல்லூரான் நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதிகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, மலர் தூவி, கைகூப்பி நல்லூரானை தரிசித்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இன்றைய தேர்த்திருவிழா, பக்தி, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் சங்கமமாக அமைந்ததுடன், நல்லூரின் ஆன்மிகப் பெருமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக்காட்டியது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை