ஐரோப்பா

இலங்கையில் விசா நிறுத்தம் – கட்டுநாயக்க விமான நிலையங்களில் நீண்ட வரிசை

  • August 13, 2024
  • 0 Comments

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏனையோருக்கு இணையத்தில் வீசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் On Arrivel Visa பெறுவதற்கு நீண்ட வரிசைகள் படிப்படியாக உருவாகி வருகின்றன. கடந்த 2ஆம் திகதியன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS குளோபல் நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அரசாங்கமும் குடிவரவு குடியகழ்வு திணைக்களமும் பழைய முறைப்படி ஒன்லைன் மூலம் விசா […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

மூளையில் சிப் பொருத்தி பார்வையற்றவர்களுக்கு பார்வைத் திறன் பெற வைக்க முயற்சி

  • August 13, 2024
  • 0 Comments

மூளையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமாக சிப் ஒன்றை பொருத்துவதால் கண் பார்வையற்றவர்கள் பார்வைத் திறன் பெறும் சோதனையில் இப்போது மனிதர்கள் பங்கேற்றுள்ளனர். தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் மருத்துவத் துறையிலும் பல முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. தொழில்நுட்பத்தைக் கொண்டு மேலும் பல ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான், தொழில்நுட்பத்தின் உதவியால் பார்வையற்றவர்களும் பார்வை பெறும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுளளனர். மூளையில் வயர்லெஸ் சாதனம்(சிப்) ஒன்றை வைப்பதன் மூலமாக பார்வையற்றவர்களுக்கு பார்வைத் திறன் கொண்டுவரும் ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று […]

செய்தி விளையாட்டு

IPL 2025 – ஏலத்தில் RCB விடுவிக்கப் போகும் வீரர்கள்

  • August 13, 2024
  • 0 Comments

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததிலிருந்து அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. அதற்குக் காரணம் நடைபெறும் போகும் ஐபில் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கான புதிய விதிமுறைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்குச் சமீபத்தில் இதற்கென ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதில் அவர்கள் பேசிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் ஒரு சில தகவல்கள் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணிகளுள் ஒன்றான ராயல் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் குடும்ப வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி

  • August 13, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். போடன்புட்டன் மாநிலத்தில் ஒவ்ஃபன் என்ற நகரத்தில் உள்ள ஓவர்கியேஷன் என்ற பிரதேசத்தில் 39 வயது நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது வீட்டில் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருடைய உதவியை நாடியுள்ளது. உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் 39 வயதுடைய நபர் பொலிஸார் மீது கத்தி குத்து […]

செய்தி

கிரீஸில் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான மக்கள்

  • August 13, 2024
  • 0 Comments

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு வடக்கே ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 25 மீற்றர் வரை தீ பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்ணவாஸ் நகரில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிகின்றன, மேலும் அந்த பகுதியை விட்டு வெளியேற முயன்ற சுமார் 25 வாகனங்களில் சிக்கிக் கொண்ட ஒரு குழுவை தீயணைப்பு வீரர்கள் விடுவித்துள்ளனர். வர்ணவாஸ் நகரில் நேற்று மதியம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இரவோடு […]

இலங்கை செய்தி

யாழில். மூதாட்டி சடலமாக மீட்பு – அயல் வீட்டு இளைஞன் கைது

  • August 13, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார். மூதாட்டி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாம பொலிஸார் மூதாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆசியா

லண்டன் உட்பட முக்கிய இடங்களுக்கு விமான சேவைகளை அதிகரித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

  • August 13, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முக்கிய நகரங்களுக்கு அதனுடைய விமானச் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அதிகமான பயணிகள் பயணம் செய்ய கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஒக்டோபர் மாதம் வரை நடப்பில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திற்கு அன்றாடம் விமானச் சேவையை நிறுவனம் வழங்கும் என்று கூறியுள்ளது. தற்போது வாரத்திற்கு 5 முறை விமானச் சேவைகள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் TIN இலக்கம் பெற்றவர்களின் எண்ணிக்கை வெளியானது

  • August 13, 2024
  • 0 Comments

18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 5 மில்லியன் மக்களுக்கு வரி அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமான வசூல் முன்னேற்றம் குறித்து முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த 7ஆம் திகதி கலந்துரையாடிய போது இது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு 255194 புதிய வரிக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 31.05.2024 நிலவரப்படி 1132598 வரிக் கோப்புகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 1.5 லட்சம் பேர் தாமாக முன்வந்து […]

ஆப்பிரிக்கா செய்தி

தான்சானியா எதிர்க்கட்சி பிரமுகர் டுண்டு லிஸ்ஸு கைது

  • August 12, 2024
  • 0 Comments

தான்சானியா பொலிசார் பிரபல அரசியல்வாதியான துண்டு லிசுவையும் மற்ற நான்கு எதிர்க்கட்சி அதிகாரிகளையும் கைது செய்துள்ளதாக சதேமா கட்சி தெரிவித்துள்ளது. லிஸ்ஸு உட்பட மூன்று அரசியல்வாதிகள் தென்மேற்கு நகரமான எம்பேயாவில் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு அவர்கள் திட்டமிட்ட பேரணிக்கு முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர். சதேமா கட்சியின் தலைவரும் அதன் இளைஞர் பிரிவின் தலைவரும் கைது செய்யப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி சாமியா ஹாசன் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடுவதற்கான தடையை நீக்கி, போட்டி அரசியலை மீட்டெடுப்பதாக உறுதியளித்த ஒரு […]

செய்தி வட அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

  • August 12, 2024
  • 0 Comments

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே 4.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையமாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள ஹைலேண்ட் பார்க் அருகே, புகழ்பெற்ற ஹாலிவுட் அடையாளம் என அமெரிக்க புவியியல் ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டது. இது அருகிலுள்ள நகரங்களான பசடேனா மற்றும் க்ளெண்டேல் மற்றும் மன்ஹாட்டன் பீச் மற்றும் எல் செகுண்டோ போன்ற பகுதிகளில் கடற்கரை வரை உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என USGS […]