இலங்கை செய்தி

உலகை அச்சுறுத்தும் Mpox – தயார் நிலையில் இலங்கை

  • August 17, 2024
  • 0 Comments

ஆபிரிக்க நாடுகளில் பரவிய Mpox சர்வதேச அளவில் பரவக்கூடிய ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை என விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கவனம் செலுத்த வேண்டிய சுகாதார தொற்று என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 15ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட அறுநூறு பேர் இறந்துள்ளனர் என்று அவர் குறிப்பிடுகிறார். மேலும், கொவிட் தொற்று காரணமாக சுமார் மூன்று ஆண்டுகளுக்கு […]

இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

  • August 16, 2024
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை தமிழ் அரசு கச்சி எம்.பி.க்கள் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றமையும் விசேட அம்சமாகும். குறித்த தேர்தலுக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள போதிலும், இது வரையில் […]

இலங்கை செய்தி

இலங்கை இராஜதந்திரி ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் பெருந்தொகை அபராதம் விதிப்பு

  • August 16, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலகா, தனது வீட்டுப் பணிப் பெண்ணின் கடவுச்சீட்டை தம் வசம் வைத்திருந்து, ஒரு மணித்தியாலத்திற்கு 75 சென்ட் சம்பளத்திற்கு அடிமையாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவராகவும் நிரந்தரப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார். ஹிமாலி அருணதிலாவின் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு வழங்கப்படாத ஊதியம் மற்றும் வட்டியாக 543000 டொலர்களை உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கான […]

இலங்கை செய்தி

கொழும்பில் முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

  • August 16, 2024
  • 0 Comments

கொழும்பு உள்ளிட்ட பல புறநகர் நகரங்களில் சில மணித்தியாலங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன்படி பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசலால், அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு செல்லும் மக்களும்,  பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்றும் நாளையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா […]

இலங்கை செய்தி

உக்ரைன் படையினரால் ஐந்து இலங்கையர்கள் கைது

  • August 16, 2024
  • 0 Comments

ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில், சம்பந்தப்பட்ட இலங்கையர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை […]

செய்தி விளையாட்டு

சாதனை படைத்த விஷ்மி குணரத்ன

  • August 16, 2024
  • 0 Comments

18 வயதான விஷ்மி குணரத்ன தனது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது முதல் சதத்தை இன்று (16) பதிவு செய்து சாதனை படைத்தார். பெல்ஃபாஸ்டில் அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன அதிகபட்சமாக 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.   இதுவரை இலங்கை மகளிர் அணிக்காக சமரி அத்தபத்து மாத்திரமே சதங்களை பெற்றுக் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

  • August 16, 2024
  • 0 Comments

திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் காவந்திஸ்ஸ புர, ஸ்ரீ புர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது மூன்று முறை டி 56 ரக துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்தனர். […]

இலங்கை செய்தி

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் புதையலை தேடிய அகழ்வு பணி

  • August 16, 2024
  • 0 Comments

யுத்த காலத்தில் விடுதலை புலிகள் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் (16.08.2024) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தது. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை […]

ஐரோப்பா

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் கும்பல் : ஸ்வீடிஷ் போலீஸ் டென்மார்க்கிற்கு பயணம்

ஸ்வீடனில் இருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கோபன்ஹேகனுக்குச் சென்று டேனிஷ் கும்பல்களின் சார்பாக வன்முறைக் குற்றங்களைச் செய்யச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் முதன்முறையாக ஸ்வீடிஷ் போலீசார் டென்மார்க்கில் ஒரு தடுப்பு அடிப்படையில் செயல்பட உள்ளனர் . அடுத்த வாரம் முதல் தெற்கு ஸ்வீடனில் இருந்து அதிகாரிகள் நிரந்தரமாக கோபன்ஹேகனில் பணியமர்த்தப்படுவார்கள், டேனிஷ் அதிகாரிகள் ஏற்கனவே மால்மோவில் உள்ள ஸ்வீடிஷ் செயல்பாட்டு அறையில் சேர்ந்துள்ளனர். அண்டை நாடான ஸ்வீடனைச் சேர்ந்த சந்தேக நபர்களை உள்ளடக்கிய கொடிய துப்பாக்கிச் சூடு […]

இலங்கை செய்தி

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்

  • August 16, 2024
  • 0 Comments

கனடா செல்ல தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல் போன நிலையில் மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி யோகபுரம் பகுதியினை சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (16.08.2024) மேற்கொண்டிருந்தனர் 19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை […]