இலங்கை செய்தி

சவப் பெட்டியுடன் மயானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மேர்வின் சில்வா

  • February 4, 2024
  • 0 Comments

ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா உள்ளிட்ட சிலர் சவப் பெட்டியை ஏந்தியவாறு பொரளை மயானத்திற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களின்  சடலத்தை அடக்கம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மயானத்திற்குள் பிரவேசித்த போது மயானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பையும் மீறி மயானத்திற்குள் நுழைந்து போராட்டத்தை […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை

  • February 4, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் பிரதான வீதியை மறித்து கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 05 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த 05 மாணவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமை, ஊடக சுதந்திரத்தில் தலையிடுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கண்டன ஊர்வலத்தில் […]

இலங்கை செய்தி

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தினருக்கு பதவி உயர்வு

  • February 4, 2024
  • 0 Comments

76வது தேசிய சுதந்திர தினத்தை ஒட்டி, 211 ராணுவ அதிகாரிகளுக்கும், 1239 இதர பதவிகளுக்கும் உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் இராணுவ அமைச்சின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்புதலுடன் இலங்கை இராணுவத்தின் 211 அதிகாரிகள் மற்றும் 1239 இதர அணிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை இராணுவத்தின் வழக்கமான மற்றும் தன்னார்வப் படையணிகளில் பிரிகேடியர் தரத்தில் இருந்த 02 சிரேஷ்ட அதிகாரிகள் மேஜர் ஜெனரலாகவும், கேணல் தரத்தில் உள்ள […]

இந்தியா

வரலாற்றில் முதன்முறையாக புதிய மருத்துவர் தேர்வாளர்களுக்கு கலந்தாய்வு! : சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி.

மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை மறுதினம் சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் 1021 மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழக அரசு மருத்துவமனைகளில் 1021 மருத்துவர்களுக்கான பணி நியமனங்கள் நடைபெற உள்ளதாகவும் அதற்காக ஏற்கனவே சான்றிதழ் சரி பார்க்கும் பணி முடிவடைந்து நேற்றும் இன்றும் கலந்தாய்வு […]

இலங்கை

“ஹரிஹரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி”: இலவசமாக கலந்துகொள்வதற்கு வாய்ப்பு

பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்குபற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சியுடனான நட்சத்திர கலை விழா இலங்கையில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான ரம்பா, ஐஸ்வர்யா ராஜேஸ், யோகி பாபு உள்ளிட்ட மேலும் பல நட்சத்திரங்கள் பங்குபற்றவுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக, VIP மற்றும் VVIPகளுக்கு மாத்திரம் அனுமதிக் கட்டணம் அறிவிடப்படுவதுடன், ஏனைய அனைவருக்கும் இலவசமாக கலந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

மீண்டும் தள்ளிப் போகும் தங்கலான் ரிலீஸ் திகதி.. அதுக்கு இப்படி ஒரு காரணமா?

  • February 4, 2024
  • 0 Comments

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்தள்ளனர். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரலுக்கு தள்ளிப் போனது. ஏப்ரல் 11ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நாளிலும் படம் ரிலீசாகாது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 26ம் […]

ஆசியா

ஹூதி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்: பிரித்தானியா எச்சரிக்கை

சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான ஹூதி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் வலியுறுத்தியுளளார். முன்னாள் கன்சர்வேடிவ் பிரதம மந்திரி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க கூட்டு வான்வழித் தாக்குதல்களின் மூன்றாவது அலை சனிக்கிழமையன்று கிளர்ச்சிப் போராளிக் குழுவை நிறுத்துவதற்கான “மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள்” செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் ஹூதிகளுக்கு நாங்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். அவர்களின் பொறுப்பற்ற செயல்கள் அப்பாவி உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது, வழிசெலுத்தலின் சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது மற்றும் […]

இலங்கை

களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய சந்தேகநபர்..!

  • February 4, 2024
  • 0 Comments

களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். கொள்ளை மற்றும் ஹெரோயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் பொலிஸ் ஜீப்பில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் கதவைத் திறந்ததும் அவருடன் கைவிலங்கிடப்பட்ட மற்றைய சந்தேகநபர் முகத்தில் தாக்கி கைவிலங்குகளை கழற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக […]

இலங்கை

இலங்கை சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் கரிநாள் பேரணி.

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பேரரசின் மன்னாரை நோக்கிய மாபெரும் கண்டன கரிநாள் பேரணியானது இன்றைய தினம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி தன்னாட்சிக்கான உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் கரிநாள் போராட்டம் பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 11மணியளவில் பிரித்தானியா இலங்கை தூதுவரகத்திலிருந்து ஆரம்பித்து பாராளுமன்ற முன்றலில் […]

ஐரோப்பா

உக்ரேனிய துருப்புக்களை நேரில் சென்று சந்தித்த வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

தென்கிழக்கு முனையில் உள்ள உக்ரேனிய துருப்புக்களுக்குச் நேரில் சென்று ஜனாதிபதி Volodymyr Zelenskiy பதக்கங்களை வழங்கியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரபலமான இராணுவத் தளபதி விரைவில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற தீவிர ஊகங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “இன்று இங்கு இருப்பது ஒரு மரியாதை. வீரர்களை ஆதரித்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும். எதிரிகளை விரட்டுவதற்கும் உக்ரைனைப் பாதுகாப்பதற்கும் அவர்கள் கடினமான மற்றும் முக்கியமான பணியை எதிர்கொள்கின்றனர் , ”என்று Zaporizhzhia பகுதிக்கு […]