ஐரோப்பா

செங்கடலில் நிலவும் பனிப்போர் : பிரித்தானியாவின் கப்பலை அனுப்புவதில் சிக்கல்!

  • February 4, 2024
  • 0 Comments

பனிப்போருக்குப் பிறகு மிகப்பெரிய நேட்டோ பயிற்சிகளை நடத்தத் தயாராக இருந்த பிரிட்டிஷ் விமானம் தாங்கி போர்க்கப்பல் இன்று (04.02) புறப்படாது என்று ராயல் கடற்படை தெரிவித்துள்ளது. எச்எம்எஸ் குயின் எலிசபெத் நோர்வேயின் ஆர்க்டிக் கடற்கரையில் பயிற்சிகளில் சேராது என்றும் அந்த கப்பலுக்கு பதிலாக   எச்எம்எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கப்பல் குறித்த பயிற்சியில் கலந்துகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2022 இல் வேல்ஸ் இளவரசர் வட அமெரிக்காவிற்கு அப்பால் உள்ள வட அமெரிக்கா மற்றும் கனடாவுடன் பயிற்சிகளை […]

ஆஸ்திரேலியா

ஹவுதி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக தாக்குதல்களிற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா

  • February 4, 2024
  • 0 Comments

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து முன்னெடுத்துவரும் தாக்குதல்களிற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. நேற்றும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த தாக்குதலிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டறிக்கையொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் வெளியிட்டுள்ளார். செங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மாலுமிகளின் உயிர்களிற்கும் சர்வதேசவர்த்தகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் திறனை குறைப்பதை நோக்கமாக கொண்ட நோக்கிலேயே இந்த துல்லியமான தாக்குதல்கள் […]

இலங்கை

இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தப்பட்ட தங்கம் : ஒருவர் கைது!

  • February 4, 2024
  • 0 Comments

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலமாக இடம்பெற்று வரும் மோசடி தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு கிட்டத்தட்ட 916 தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த அதிகாரிகள் சந்தேக நபருடன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட தங்க […]

ஐரோப்பா

லண்டனில் அமில வீச்சு தாக்குதல் : சந்தேக நபர் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அறிவிப்பு

தெற்கு லண்டனின் Clapham பகுதியில் நடந்த அமில வீச்சு தாக்குதல் நடத்திய சந்தேக நபரை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு 20,000 பிரித்தானிய பவுண்டுகள் வரை வெகுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அப்துல் ஷோக்கூர் எஸெடி கடைசியாக ஜனவரி 31 அன்று 21:33 GMT மணிக்கு டவர் ஹில் நிலத்தடி நிலையத்திலிருந்து புறப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்தவர்கள் இன்னும் முன்வரவில்லை என்று துப்பறியும் நபர்கள் தெரிவித்தனர். அமில வீச்சு […]

ஐரோப்பா

AI மூலம் வருங்கால மனைவியை தேர்ந்தெடுத்த ரஷ்ய இளைஞர்!

  • February 4, 2024
  • 0 Comments

ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்திற்குப் பொருத்தமான பெண்ணை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு செய்துள்ளார். சாட்ஜிபிடி மூலம் தனது வருங்கால மனைவி யார் என்று கண்டுபிடித்துள்ளார். இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. உலகம் முழுவதும் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடி வருகைக்குப் பின் […]

இந்தியா

இந்தியாவின் கார்கில் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • February 4, 2024
  • 0 Comments

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் பரப்பளவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், உயிர்ச்சேதமோ, உடமைச் சேதமோ ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தியா

போரில் குழந்தைகளை இழந்தும் குறையாத நெஞ்சுரம்… பாலஸ்தீன செய்தியாளரை கௌரவப்படுத்தவுள்ள கேரளா மீடியா அக்காடமி !

  • February 4, 2024
  • 0 Comments

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பின்னும் களத்தில் நின்ற செய்தியாளருக்கு சிறந்த பத்திரிகையாளருக்கான விருது வழங்கி கேரளா அரசு கௌரவிக்க உள்ளது. காசா பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசு முழு வீச்சில் போரைத் துவங்கி நடத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடரும் குண்டு வீச்சு சம்பவங்களால் இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. […]

பொழுதுபோக்கு

“கடைசி விவசாயி” படத்தின் நடிகை அடித்துக் கொலை – பரபரப்பு செய்தி

  • February 4, 2024
  • 0 Comments

‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டியை, அவரின் மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் பால்சாமி மனைவி காசம்மாள். விவசாய கூலி தொழிலாளியான இவர் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்திருந்தார். இவருக்கு நாமகோடி, தனிக்கொடி என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் நாமகோடி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் […]

இலங்கை

கறுப்பு சுதந்திர தினம் ; மட்டக்களப்பில் முன்னெடுக்கப்ட்ட மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

  • February 4, 2024
  • 0 Comments

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் இந்த நாட்டில் தமிழர்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்காத நிலையில் இந்த நாளை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் பிரதான போராட்டம் […]

இலங்கை

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுதந்திரத்தின கொண்டாட்டங்கள்!

  • February 4, 2024
  • 0 Comments

முல்லைத்தீவில் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திர தினம் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இலங்கையின் தேசிய கொடியினை அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிட்டும் இன்றையதினம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.