விளையாட்டு

3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

  • February 14, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இன்று (14) நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக Rahmat […]

இலங்கை

கிண்ணியாவில் படகு கவிழ்ந்து பரிதாபமாக இருவர் பலி

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஈச்சந்தீவு கலப்பு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த உதயரூபன் ஐஸ்மன் (18வயது) மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த புஷ்பராஜா (45) ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, ஐந்து பேர் கொண்ட குழுவினர் படகில் பயணித்ததாகவும் இதனை அடுத்து படகு கவிழ்ந்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு […]

செய்தி

சென்னையிலிருந்து புறப்பட தயாரான விமானம்… எமர்ஜென்சி கதவை திறந்த இளைஞரால் பரபரப்பு!

  • February 14, 2024
  • 0 Comments

சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாரானபோது பயணி ஒருவர், எமர்ஜென்சி கதவினை திறக்க முயன்று அலாரம் அடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 159 பயணிகளுடன் டெல்லி செல்வதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு தயாரானது. ஓடுபாதையில் விமானத்தை இயக்க விமானி தயாரானபோது, திடீரென விமானத்துக்குள் அலாரம் ஒலித்தது. இந்த சத்தம், அவசரகால கதவினை திறந்தால் எழுப்பும் அலாரம் என்று தெரியவந்தது. இதையடுத்து விமான பணிப்பெண்கள், அலாரம் […]

இலங்கை

முல்லைத்தீவில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள நோயாளர்கள்

  • February 14, 2024
  • 0 Comments

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே நேற்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு […]

இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்: அதாவுல்லா மீது சாணக்கியன் கடும் விமர்சனம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா கலந்து கொண்டு மாவட்ட பிரச்சினைகளை பேச விடாது தடுக்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் ”அதாவுல்லா எவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் […]

இலங்கை

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை!

  • February 14, 2024
  • 0 Comments

திருமணமாகாத பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபா நட்டஈடு மற்றும் குற்றவாளிக்கு 20,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று (14) குற்றவாளிக்கு உத்தரவிட்டார். நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய லக்ஷ்மன் சாலிய பண்டார விரசிங்க என்பவருக்கே குறித்த அபராதம் மற்றும் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனையுடன், […]

இலங்கை

யாழில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோரவிபத்து!

  • February 14, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – இனுவில் புகையிரத நிலையத்திற்கு அருகில்  இன்று (14.02) இடம்பெற்ற வாகன விபத்தில் 06 மாத குழந்தை உள்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த நால்வரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணித்த புகையிரதத்தில் ஹயஸ் ரக வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம் அடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து […]

இலங்கை

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு : சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டு, தமது தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 19) அவர்களுடன் கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இணக்கம் தெரிவித்ததையடுத்து, கொடுப்பனவுகளில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இணங்கியுள்ளன. இதன்படி நாளை (15) காலை 6.30 மணிக்கு பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.  

இலங்கை

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு பிறகு 02 இலட்சத்திற்கும் மேற்பட்ட வணிகங்கள் மூடப்பட்டுள்ளன!

  • February 14, 2024
  • 0 Comments

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகளால் கிட்டத்தட்ட  இரண்டு இலட்சத்து அறுபத்து மூவாயிரம் நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. அவர்கள் தங்களது சமீபத்திய ஆய்வு அறிக்கையை வெளியிட்டு இதை வெளிப்படுத்தினர். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை அறிய, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை நிறுவன அளவிலான […]

இலங்கை

அறிமுகமான ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம்

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (13) இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) படி, இந்த மைல்கல், ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கிறது. இதன் மூலம், ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதிய தகவல்களை மும்மொழிகளிலும் பொதுமக்கள் பெறமுடிவதுடன், மருத்துவ உதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தைப் […]