ஆசியா

மாலதீவில் அடுத்தடுத்து முடங்கிய அதிபர், அரசுத்துறை இணையப்பக்கங்கள் !

  • January 7, 2024
  • 0 Comments

மாலத்தீவு அதிபரின் இணையதளம், சுற்றுலா அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையப்பக்கங்கள் அடுத்தடுத்து முடங்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மாலத்தீவு. உலகின் மிகவும் தாழ்வான நாடு என்ற பெயர் மாலத்தீவுக்கு உண்டு. கடல் மட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 5 மீட்டர் உயரத்தில் இந்த தீவு அமைந்துள்ளதால், சுற்றுலாத்துறையின் சொர்க்கபூமியாக உள்ளது. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவே கைகொடுத்து வருகிறது. கடந்த 196-ம் ஆண்டு மாலத்தீவுகளுக்கு பிரிட்டிஷ் அரசு விடுதலை அளித்தது. இதையடுத்து தற்போது மாலத்தீவின் […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!

  • January 7, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கைப் பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெஃப்.ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளும் இது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக பெஃப்.ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலை ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை இலக்கு வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தற்போது விழிப்புணர்வு நிகழ்ச்சி […]

இந்தியா

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பள்ளியொன்றில் 40இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

  • January 7, 2024
  • 0 Comments

அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் முதன்மை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், சிலர் தானாகவே குணமடைந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மயங்கி விழுந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

GOAT படத்தின் மற்றுமொரு சப்ரைஸ் வெளியானது…

  • January 7, 2024
  • 0 Comments

நடிகர் விஜய்யின் 68வது படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் முடிவடைந்துவிடும் என்று வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். அதற்காக வெங்கட் பிரபு தற்போது இலங்கை சென்றுள்ளார். ஜனவரி இரண்டாம் வராத்தில் விஜய் இலங்கை செல்வார் என்றும் கூறப்படுகின்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானதை அடுத்து, இரண்டாவது […]

பொழுதுபோக்கு

நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கு பக்கம் செல்லும் இசைப்புயல்…

  • January 7, 2024
  • 0 Comments

தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம் சரண். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கடந்த சில வருடங்களாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு ‘உப்பெனா’ பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் அவரது 16வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஏ.ஆர். ரகுமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லியதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த போஸ்டரைப் பகிர்ந்து ராம் […]

இலங்கை

தெஹிவளையில் மிருகக்காட்சிசாலையில் தனித்து வாழும் விலங்குகள்!

  • January 7, 2024
  • 0 Comments

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கூண்டுக்குள் தனியாக வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 15 விலங்குகள் அவற்றின் கூண்டுகளில் தனியாகவும், 35 விலங்குகள் துணையின்றியும், 21 விலங்குகள் துணையில்லாமல் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. அதன்படி, தனியாக வாழும் விலங்குகள் மற்றும் தனிமைப்படுத்தப்படுவது அந்த விலங்குகளின் ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

போர்ச்சுகல் நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்- 25 பில்லியன் யூரோக்கள் பதிவு

  • January 7, 2024
  • 0 Comments

போர்த்துகீசிய அதிகாரிகள் 25 பில்லியன் யூரோ வருவாய் ஈட்டியதன் மூலம், 2023ஆம் ஆண்டை சுற்றுலாத்துறையில் தங்களின் மிக வெற்றிகரமான ஆண்டாக அறிவித்தனர், அதுவரை சிறந்த சுற்றுலா ஆண்டாக இருந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இத்தகைய எண்ணிக்கை 37 சதவீதம் அதிகமாகும். 2022 உடன் ஒப்பிடுகையில், போர்ச்சுகலில் சுற்றுலா வருவாயில் 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது. போர்ச்சுகல் 2023 ஆம் ஆண்டு  30 மில்லியன் வெளிநாட்டவர்களை வரவேற்றது. இதனால் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டான 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பத்து சதவீத […]

வாழ்வியல்

தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

  • January 7, 2024
  • 0 Comments

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் எந்தவித பக்கவிளைவு இல்லாத உணவு என்றால் அது முட்டை தான். அதன்படி சைவ உணவு உண்பவர்கள் கூட முட்டையை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த அளவிற்கு முட்டையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. முட்டையை ஆம்லெட்டாகவோ அல்லது அவித்தோ சாப்பிடலாம். ஆனால் இதில், முட்டையை தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் தான் அதிக அளவு நன்மைகள் கிடைக்கிறது. அதன்படி தினமும் முட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த […]

இலங்கை

இலங்கையில் 24 மணி நேரத்தில் 1,135 பேர் கைது – அதிரடி காட்டும் பொலிஸார்

  • January 7, 2024
  • 0 Comments

இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், 1,135பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 46 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், போதைப்பொருட்களுக்கு அடிமையான 16 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில், 05 கிலோ 900 கிராம் கஞ்சா, 56 கிலோ 100 கிராம் ஹெரோயின், 189 கிலோ 600 கிராம் ஐஸ், […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த 5 பேருக்கு நேர்ந்த கதி

  • January 7, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வேலைக்கு எடுத்த 5 பேரே இவ்வாறு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான வேலை அனுமதிச் சீட்டுகள் இல்லாமல் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக 52 வயது நபர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் S$23,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மூன்று சகோதரர்கள் உட்பட 5 பேரும் குற்றாவளிகள் என கூறப்பட்டுள்ளது. அதில் இருவர், கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் […]