பொரலுகந்த ரஜமகா விகாரை தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் (Photos)
திருகோணமலை- இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்று வந்தநிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டது. குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் […]













