எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து மற்றுமொரு கட்டணமும் அதிகரிப்பு!
பஸ் கட்டணத்தை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் […]













