இலங்கை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

  • October 30, 2023
  • 0 Comments

வவுனியா மன்னார் வீதி பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று (29.10) இரவு வவுனியா மன்னார் வீதி வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவை பகுதியில்  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி […]

வட அமெரிக்கா

ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றால் அமெரிக்க்காவுக்கு ஆபத்து -குடியரசு க்கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு

  • October 30, 2023
  • 0 Comments

டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்பது அமெரிக்காவுக்கு ஆபத்து என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அவருக்கு எதிராக இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும், ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாண […]

இலங்கை

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு!

  • October 30, 2023
  • 0 Comments

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயில் ஒன்று கெயினிகம மற்றும் ஹெய்லோயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இன்று (30.10) முற்பகல் 11.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இலங்கை

மட்டக்களப்பில் 08 வயது குழந்தையை தாக்கிய மௌலவி கைது!

  • October 30, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் எட்டு வயது குழந்தையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்விக்காக தேவாலயத்திற்குச் சென்ற போது சந்தேகநபர் ஒருவர் குறித்த  குழந்தையை தடியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த குழந்தை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. குறித்த குழந்தை கற்பதற்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை முறையாக ஓதாத காரணத்தினால் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இலங்கை

துருக்கியில் இருந்து இயக்கப்படும் நேரடி விமான சேவை : இன்று முதல் ஆரம்பம்!

  • October 30, 2023
  • 0 Comments

துருக்கி விமான சேவையின் முதல் விமானம், இன்று (30.10) நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது. அதன்படி, துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று அதிகாலை 05.40 மணியளவில் TK-730 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் இருந்து 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். துருக்கியில் இருந்து இயக்கப்படும் குறித்த விமானமானது திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 05.40 மணிக்கு புறப்பட்டு மீண்டும் காலை 07.40 மணிக்கு கட்டுநாயக்க […]

இலங்கை

குருநாகல் அரிசி களஞ்சிய சாலையில் இருந்து மாயமான அரிசி!

  • October 30, 2023
  • 0 Comments

குருநாகல் பிரதேசத்தில் உள்ள இரண்டு அரச அரிசிக் களஞ்சியசாலைகளில் இருந்து 700 இலட்சம் அரிசி கையிருப்பு காணவில்லை என அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் போன அரிசியின் பெறுமதி 650 – 700 இலட்சம் ரூபா வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை

யாழில் சிக்கிய மர்ம பொதி – விசாரணையில் வெளிவந்த தகவல்

  • October 30, 2023
  • 0 Comments

வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடாத்தப்பட்ட சோதனையின்போது கேரள கஞ்சா மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பொதி எவ்வாறு வந்திருக்கும் என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்து […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • October 30, 2023
  • 0 Comments

!ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 22,500 க்கும் மேற்பட்ட நியூசிலாந்து மக்கள் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை புதிய நேரடி வழி மூலம் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் குடியுரிமைக்கான மொத்த விண்ணப்பங்களில் 45 சதவீதத்தை இது குறிக்கிறது மற்றும் ஆகஸ்ட் 31, 766 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. குடியுரிமை கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் ஏற்பட்ட தாமதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 31, 2023 நிலவரப்படி, குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் 88,310 நிலுவையில் உள்ளன, இது […]

பொழுதுபோக்கு

மக்களே… தளபதியின் குட்டி ஸ்டோரியை கேட்க ரெடியா? லியோ சக்சஸ் மீட் நடத்த அனுமதி

  • October 30, 2023
  • 0 Comments

லியோ படத்தின் வெற்றி விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் எல்சியு-வில் இருந்ததால் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படத்தின் முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இல்லை என்கிற கலவையான […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு – காரணம் கண்டறிய முயற்சி

  • October 30, 2023
  • 0 Comments

இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டை […]