இலங்கை

துருக்கியில் இருந்து இயக்கப்படும் நேரடி விமான சேவை : இன்று முதல் ஆரம்பம்!

துருக்கி விமான சேவையின் முதல் விமானம், இன்று (30.10) நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன்படி, துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று அதிகாலை 05.40 மணியளவில் TK-730 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் இருந்து 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

துருக்கியில் இருந்து இயக்கப்படும் குறித்த விமானமானது திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 05.40 மணிக்கு புறப்பட்டு மீண்டும் காலை 07.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துருக்கிக்கு புறப்படும்.

அடுத்த வருடம் முதல் வாரத்தில் 7 நாட்களுக்கு ஒருமுறை துருக்கி விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 10 வருடங்களாக துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது விமானங்களை இயக்கி வந்ததுடன், நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் துருக்கியிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என ஏர்போர்ட்ஸ் அன்ட் ஏர்லைன்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்