வாழ்வியல்

குளிர் காலத்தில் இதயக் கோளாறுகளைத் தடுக்க சிறந்த ஆயுர்வேதத் தீர்வு

  • November 8, 2023
  • 0 Comments

குளிர் காலத்தில் இதயப் பிரச்சினைகள் மிகவும் பொதுவானதாகி விடுகின்றன, எனவே ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் வெளிப்படையான அறிகுறிகளை கவனிக்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, வானிலை தொடர்பான மாரடைப்புக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, நமது உடலின் உடலியல் மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி இதயத்தை பாதிக்கும் விதம். உடலின் உயிரியல் நிலை சிம்பெதெட்டிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலம் தடைபடுகிறது, இது நம் உடலில் உள்ள ரத்த நாளங்களை சுருக்குகிறது. இது ‘வாசோகன்ஸ்டிரிக்ஷன்’ எனப்படும். இந்தச் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் படைகள் போர் நிறுத்தம் செய்ய பிரதமர் நேதன்யாகு மறுப்பு!

  • November 8, 2023
  • 0 Comments

காசாவின் மையப்பகுதியில் இஸ்ரேல் படைகள் போர்நிறுத்தம் செய்ய பிரதமர் நேதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார். காசாவின் மையப்பகுதிக்கு இஸ்ரேல் படைகள் முன்னேறியிருப்பதாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் இருப்பிடங்களை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்போரின் மூலம் மறைமுகமான பாரசீக வளைகுடாவில் ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி தனது பலத்தை காட்டும் வகையில் அணு ஆயுதத்துடன் கூடிய ஃபுளோரிடா நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதனிடையே காசாவுடன் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலுக்கு […]

செய்தி

கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து விபத்து பலர் காயம்

  • November 8, 2023
  • 0 Comments

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒரே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வலது பக்கம் நோக்கி திரும்ப முற்பட்டதில் பேருந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 60 பேர் […]

வட அமெரிக்கா

பிரேசிலில் இளைஞனின் அதிர்ச்சி செயல் – காதலிக்கு நேர்ந்த கதி

  • November 8, 2023
  • 0 Comments

பிரேசிலில் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த காதலன் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது காதலனால் 23 வயது பெண் சுட்டுக் கொல்லப்படும்போது அதை வீடீயோவாக உயிரிழந்த பெண் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் காதலர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அதில் காதலன் ஒரு தங்க நிற துப்பாக்கியை எடுத்து தனது காதலியை நோக்கி காட்டுகிறார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

2024 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிடும் புதிய விஷன் ப்ரோ ஹெட்செட்!

  • November 8, 2023
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அதிநவீன கண்டுபிடிப்பான விஷன் ப்ரோ ஹெட்சட்டை 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை விற்பனை செய்வதற்கு முன்னதாக இந்த சாதனத்தைப் பற்றி அதன் விற்பனை முகவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஹெட்செட்டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும், அதில் உள்ள அம்சங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தேர்வு செய்யப்பட்ட முகவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்பிள் […]

செய்தி

பிரான்ஸில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது

  • November 8, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். யூதமதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 1,040 யுதமத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. நாஸி இலட்சணைகள் சுவற்றில் வரையப்படுவது அதிகரித்துள்ளது. மொத்தமாக 486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 102 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதுபோல் நாஸி படையினரின் லட்சணைகளை (ஸ்வாதிஸ்கா) வரைவோருக்கு எதிராக எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் அமைச்சர் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் கடுமையாகும் சட்டம் – வெளியான முக்கிய தகவல்

  • November 8, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் கடுமையாக சட்டங்களை ஜெர்மன் அரசாங்கமானது அறிமுகப்படுத்தி வருகின்றது. ஜெர்மனியில் அகதிகள் தொடர்பில் பல்வேறு விதமாக அரச மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றன. 4ஆம் திகதி அகதிகள் ஜெர்மனிய நாட்டில் வேலை செய்வது தொடர்பான சில நெகிழ்வு தன்மையான விடயங்களை ஜெர்மனியின் அமைச்சரவை நிறைவேற்றி இருக்கின்றது. அதாவது வேலை செய்வதற்காக வழங்கப்படுகின்ற தற்கால வதிவிட விசாவானது ஏற்கனவே 1.8.2018 ஆம் ஆண்டுக்கு முதல் வந்தவர்களுக்கு ஜெர்மனியில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்பொழுது வேலை செய்வதற்காக வழங்கப்படுகின்ற […]

ஆசியா

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு!

  • November 8, 2023
  • 0 Comments

  சிங்கப்பூரில் அதிகமான லொரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 3,501 முதல் 12,000 கிலோகிராம் வரை பாரம் உள்ள லாரிகளில் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாகும். ஏற்கனவே 12,000 கிலோகிராமுக்கும் அதிகமான பாரம் உள்ள லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாக இருக்கிறது. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்துக்குள் லாரி செல்வதைக் கருவி உறுதிசெய்யும். கருவிகளைப் பொருத்துவது வரும் ஜனவரி முதல் திகதி தொடங்கும். அதற்கு 3 ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்படும் […]

இலங்கை

இஸ்ரேலில் 10,000 இலங்கை தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு

  • November 8, 2023
  • 0 Comments

போரினால் கடுமையாக இஸ்ரேலின் விவசாயத் துறைக்கு 10,000 இலங்கை தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் உள்விவகார அமைச்சர் மோஷே ஆபெல் மற்றும் இலங்கைப் பிரதிநிதி ஆகியோர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சில் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 10,000 இலங்கைத் தொழிலாளர்களை உடனடியாக விவசாயப் பணிகளுக்கு அழைத்து வருவதற்கு இஸ்ரேலுக்கு வாய்ப்பு கிடைக்கும். இஸ்ரேலியப் போரினால் சுமார் 8,000 விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாகவும், மேலும் 20,000 பலஸ்தீனிய விவசாயத் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மூளை உண்ணும் அமீபா!!! 11 பேர் பலி

  • November 7, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. பல மாநிலங்களில் ‘மூளையை தின்னும் அமீபா’வால் மக்கள் உயிரை இழக்கிறார்கள். ‘நேக்லேரியா ஃபௌலேரி’ என்ற ஒற்றை செல் உயிரினம் இதுவரை 11 பேரைக் கொன்றுள்ளது. கராச்சியின் மத்திய மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் இந்த அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், 45 வயது நபர் இறந்தார். கராச்சியில் மூளையை தின்னும் அமீபா ‘நேக்லேரியா ஃபோலேரி’ மேலும் ஒருவரைக் கொன்றதாக சிந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பெருநகரத்தின் கராச்சி தாங்கல் மண்டலத்தில் […]