இலங்கையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து!
இலங்கையில் இன்று (17.11) அதிகாலை கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானது. தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் வீதியின் ஓரம் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் மற்றும் தொலைபேசிக் கம்பம் உடைந்ததுடன், அருகில் இருந்த இரண்டு வீடுகளின் சுவர் மற்றும் கேட்டை முற்றாக சேதமாகியுள்ளது. விபத்தில் பஸ் பலகையில் பயணித்த நடத்துனர் படுகாயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]













