இலங்கை

புலிகளின் ஒத்த ஆடை; அறுவரிடம் வாக்கு மூலம் பெற்ற கோப்பாய் பொலிஸார்

  • November 29, 2023
  • 0 Comments

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன. அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் […]

இலங்கை

யாழ் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவ உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

  • November 29, 2023
  • 0 Comments

கடந்த திங்கட்கிழமை யாழ் மாநகர சபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பல சுகாதார சீர்கேடு குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.  ஏற்கனவே பல தடவைகள் அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டுடனேயே குறித்த உணவகம் இயங்கி வந்தமை அவதானிக்கப்பட்டது. அத்துடன் உணவகத்தில் திகதி காலாவதியான உணவு பொருட்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து உணவக உரிமையாளரிற்கு எதிராக நீதிமன்றில் இன்று […]

இலங்கை

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை முயற்சி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மனைவியை தீயிட்டு எரிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டிசம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . அம்பலாங்கொட ரண்தொம்பே பகுதியைச் சேர்ந்த தினுஷ நுவன் கொடிதுவக்கு என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேக நபர் மனைவியின் சகோதரரான மைத்துனரை குத்திக் கொலைசெய்த வழக்கு விசாரணை பலப்பிட்டிய நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மனைவியின் தம்பியை கொலை செய்தமை தொடர்பில் […]

இலங்கை

இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்!

  • November 29, 2023
  • 0 Comments

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை 03 மாத காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பதவியேற்ற பின்னர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார். இதுவரை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சி.டி.  விக்கிரமரத்ன அந்த பதவியிலிருந்து மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், ஜனாதிபதி 04 தடவைகள் அவரது சேவையை நீடித்தார். அவருக்கு வழங்கப்பட்ட நான்காவது சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு […]

உலகம்

அமெரிக்க ஆதரவிற்கு “நன்றி” தெரிவித்த ஸ்வீடன்

நேட்டோவில் சேர நாடு தொடர்ந்து காத்திருக்கும் நிலையில், ஸ்வீடனின் வெளியுறவு மந்திரி அமெரிக்க ஆதரவிற்கு “நன்றி” என்று கூறியுள்ளார். நேட்டோ அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் சந்தித்தபோது எதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிற்கும் உலகிற்கும் – மற்றும் ஒரு அமைப்பாக நேட்டோவிற்கும் பாதுகாப்பு மோசமடைந்து வருவதாலும், உக்ரைனில் நடக்கும் போராலும், நேட்டோவில் ஸ்வீடனின் உறுப்புரிமை அமைப்புக்கு மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பா

போப் பிரான்சிஸின் முக்கிய வெளிநாட்டு பயணங்கள் இரத்து!

  • November 29, 2023
  • 0 Comments

போப் பிரான்சிஸின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக அவரின் துபாய் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், அவர் தனது  மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய ஐ.நா.வின் முக்கிய காலநிலைப் பேச்சுவார்த்தைகளுக்கான தனது திட்டமிடப்பட்ட பயணத்தை செவ்வாயன்று ரத்து செய்தார். இதற்கிடையில் வரும் வெள்ளிக்கிழமை (01.12) துபாய் செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வாடிகனில் இன்று (29.11) இடம்பெற்ற பார்வையாளர்கள் சந்திப்பில்,  […]

ஐரோப்பா

உக்ரேனிய அதிகாரிகளுடன் நீண்ட சந்திப்பில் ஈடுபட்ட ஜெலன்ஸ்க்கி

உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்க்கி போர் தொடர்பாக ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் மற்றும் பிரதமர் உட்பட பிற துறைகளுடன் “நீண்ட” சந்திப்பை நடத்தியதாக தெரிவித்துள்ளார். . சந்திப்பின் போது, ​​”உக்ரைனுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல்கள் பற்றிய முக்கிய பகுப்பாய்வை” ஊழியர்கள் மேற்கொண்டதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். “எங்கள் மொபைல் துப்பாக்கிச் சூடு குழுக்களை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தெளிவான தேவை உள்ளது, அத்துடன் அனைத்து சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளையும் பெற வேண்டும். தேசபக்தர்கள் மற்றும் NASAMS இன் […]

பொழுதுபோக்கு

அம்மன் படத்தில் நடித்த சிறுமி யார் தெரியுமா? இப்போ எப்படி இருக்காங்க? லேட்டஸ்ட் போட்டோ

  • November 29, 2023
  • 0 Comments

90ஸ் கிட்ஸிடம் சாமி படம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது பெரும்பாலும் ‘அம்மன்’ படமாகத்தான் இருக்கும். அம்மன் என்றாலே ரம்யா கிருஷ்ணன் தான் என்று நம்பி கொண்டிருந்த 90’ஸ் சிறுவண்டுகளும் உண்டு. பேய் படங்களை கூட அசால்டாக பார்த்த 90’ஸ் கிட்ஸ், அம்மன் படத்தில் வரும் மொட்டை மந்திரவாதி வில்லன் சொல்லும் “சண்டா..” சத்தத்தை கேட்டு அலறியுள்ளனர் என்றால் மறுக்கமுடியாது. கோடி ரம்யா கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, ராமயா கிருஷ்ணன், சுந்தர் […]

இலங்கை

உரும்பிராய் காளி கோயிலில் ஐம்பொன்னிலான அம்மன் சிலை திருட்டு!

  • November 29, 2023
  • 0 Comments

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று (28.11) இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகைதிருடப்பட்டுள்ளதோடு ஆலய வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ஒரு தொகை பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இன்று […]

இலங்கை

ஜனாதிபதி வெளியிலே ஒரு பேச்சும் உள்ளே ஒரு நடவடிக்கையுமா? ரவிகரன் கேள்வி

ஜனாதிபதி வெளியே ஒரு பேச்சு உள்ளே ஒரு நடவடிக்கையா? என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றையதினம் அவரது அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு அரிசி வழங்கி வைக்கும் நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”கடந்த 27 ஆம் திகதி மாவீரர்தினம் தொடர்பாகவும் சில கருத்துக்களை கூற விரும்புகின்றேன். நாட்டின் அரச தலைவர் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர எவ்வித […]