அமெரிக்காவில் ஆன்லைனில் துப்பாக்கி குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொன்ற இந்திய மாணவன்!
அமெரிக்காவில் தனது தாத்தா, பாட்டி, மாமா ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இந்திய மாணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஓம் பிரம்பாத்(23) சில மாதங்களுக்குமுன்பு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் குடியேறிய தனது பாட்டி வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார். அந்த வீட்டில் ஓம் பிரம்பாத்தின் தாத்தா திலீப்குமார் பிரம்பாத்(72), பாட்டி பிந்து பிரம்பாத்(72), மாமா யஷ்குமார் பிரம்பாத்(38) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், திங்களன்று ஓம் பிரம்பாத் வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. […]













