`இந்தி நாட்டின் தேசிய மொழி…!” – சர்ச்சையை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
வாகன விபத்து வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர், இந்தியை தேசிய மொழி எனக் கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் வாகன விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதில் மோட்டார் வாகன சட்டத்தின்படி, உரிமை கோருபவர்கள் தாங்கள் வசிக்கும் அல்லது வணிகம் நடத்தும் இடத்துக்கு அருகிலுள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் (MACT) வழக்கு தொடுக்கலாம். இதனடிப்படையில், இந்த வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், உத்தரப்பிரதேசத்தின் ஃபதேகரில் உள்ள […]













