பொழுதுபோக்கு

8 நிமிட இடைவேளை குறித்து ‘லியோ’ தயாரிப்பாளரின் மாஸ் அப்டேட்

  • August 22, 2023
  • 0 Comments

‘லியோ’ படத்தை பார்த்த தயாரிப்பாளர் லலித்குமார் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம். இந்த படத்தில் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே சஞ்சத் மற்றும் அர்ஜூன் ஆகிய இருவரின் பிறந்தநாளையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ‌ இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் […]

இலங்கை

நெற்செய்கைக்கு இணையான விலையில் கிடைக்கும் உரத்தை மரக்கறி செய்வோருக்கும் வழங்க நடவடிக்கை!

  • August 22, 2023
  • 0 Comments

நெற்செய்கைக்கு யூரியா உரத்திற்கு இணையான விலையில் கிடைக்கும் யூரியா உரத்தை   மரக்கறி விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொருளாதார நிலையங்களின் முகாமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு கருத்து தெரிவித்த விவசாய பிரதிநிதிகள், தொடரும் வறட்சி மற்றும் உர விலை உயர்வால் மரக்கறி விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெல் பயிர்ச்செய்கைக்கு யூரியா உரம் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பம் – குடும்பத்தார் விடுத்துள்ள கோரிக்கை

  • August 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கர்நாடகாவைச் சேர்ந்த யோகேஷ் நாகராஜப்பா – பிரதீபா அமர்நாத் என்ற தம்பதியும் அவர்களது 6 வயது மகனும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரது சடலங்களும் கடந்த சனிக்கிழமை மேரிலேண்ட் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனைவியையும் மகனையும் சுட்டுக் கொன்ற பின் யோகேஷ் நாகராஜப்பா தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகியும் உடல்களைப் […]

இலங்கை

தண்ணிமுறிப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 46 மீனவர்கள் விடுதலை

  • August 22, 2023
  • 0 Comments

தண்ணிமுறிப்பு குள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 46 மீனவர்களும் இன்றையதினம் (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்ட போது பெரும்பான்மையினத்தை சேர்ந்த மீனவர்கள் சார்பாக தோன்றிய சட்டத்தரணி அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மன்றுக்கு வழங்கியிருந்தார். அதன்பின்னர் நீதிபதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மீனவர்கள் 46 பேரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் […]

இலங்கை

இலங்கையில் தலைத்தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்!

  • August 22, 2023
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலங்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் (ஆகஸ்ட்) வரை சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த புள்ளிவிவரங்கள் மாறலாம் எனவும், இதுவரை 28 பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை

வாகன இறக்குமதியில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

  • August 22, 2023
  • 0 Comments

பொது போக்குவரத்து பேருந்துக்கள், லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதில் எழும் கடன் கடிதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் கடனுதவிக்கான சர்வதேச அங்கீகாரம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் கடன் […]

ஐரோப்பா

சிறுமி சாரா கொலை வழக்கு :பாகிஸ்தானில் இருந்து லண்டன் பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பு

  • August 22, 2023
  • 0 Comments

சர்ரே பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி தொடர்பில், பொலிஸார் வெளியிட்ட புதிய தகவலில், சிறுமியின் இறப்பு குறித்து பாகிஸ்தானில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 10ம் திகதி சர்ரே பொலிஸார் முன்னெடுத்த சோதனையில், குடியிருப்பு ஒன்றில் இருந்து 10 வயது சிறுமி சாரா ஷெரீப் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், தொடர்புடைய தகவலை பாகிஸ்தானில் இருந்து சிறுமியின் தந்தையே லண்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னரே […]

இலங்கை

காலி சிறையில் பரவிவரும் இனம்தெரியாத பக்டீரியா தொற்றால் பலர் பாதிப்பு!

  • August 22, 2023
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அந்தந்த உயிரிழப்புகளுக்கு பாக்டீரியா தொற்றுதான் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  அந்த நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் தோல் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் ரிமாண்ட் சிறையில் உள்ள கைதிகள் எனவும்  இச்சம்பவம் தொடர்பாக  அறிக்கையைப் பெறவும் […]

பொழுதுபோக்கு

‘மார்க் ஆண்டனி’ இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு

  • August 22, 2023
  • 0 Comments

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. திரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் […]

தென் அமெரிக்கா

கொலம்பிய ஆயுத படையால் மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

  • August 22, 2023
  • 0 Comments

கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள் ஆனைத்தும் மீண்டும் கடல் பகுதியில் கொண்டு விடப்பட்டன. கடத்தப்பட இருந்த 43 அரியவகை ஆமைகளை கொலம்பிய ஆயுத படையினர் மீட்டுள்ளனர். இவற்றில் 25 ஆமை குஞ்சுகள் மற்றும் 3 வளர்ந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அடங்கும். இந்த ஆமைகளின் பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மீட்டக்பட்ட அனைத்து ஆமைகளும் மீண்டும் கடலில் விடப்பட்டன.