இலங்கை

எரிபொருள் விலை திருத்தியமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சிடையந்துள்ளபோதிலும் அதற்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலையை விளக்குவதற்காக, இன்று (17) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள், முன்னர் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், அந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட  எரிபொருள் கையிருப்பு தீரும் வரை நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க இயலாது என்று  கூறினார்.

இருப்பினும், அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் பயன்படுத்தப்பட்ட பின்னரே விலை குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்