அமெரிக்க இடைத் தேர்தல் – மக்களின் ஆதரவை பெற ட்ரம்ப் போடும் புதிய திட்டம்!
ஈரான் போரினால் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக 18 சென்ட் கூட்டாட்சி எரிவாயு வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எரிவாயு வரியை நீக்கப் போகிறோம், எரிவாயு விலை குறையும்போது, அதை படிப்படியாக மீண்டும் அமல்படுத்துவோம்,’ என்று தெரிவித்துள்ளார்.
ஒரு கேலன் எரிவாயுவுக்கு 18.4 சென்ட் மற்றும் ஒரு கேலன் டீசலுக்கு 24.4 சென்ட் என்ற அளவில் வரிச்சலுகை வழங்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கியதில் இருந்து ஒரு கேலன் எரிவாயுவின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மேற்படி வரிசலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு வரிச்சலுகை வழங்கப்படும் பட்சத்தில் போர் தொடங்குவதற்கு முன்பிருந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல்களை பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில், சுமார் 63 சதவீத அமெரிக்கர்கள் விலை உயர்வுக்கு ட்ரம்ப்பைக் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே நேரத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் எரிபொருள் செலவுகள் தங்கள் நிதிநிலையைச் சிரமப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.




