ஹங்கேரியில் சாரதிக்கு ஏற்பட்ட சோர்வு – 12 பேர் உயிரிழப்பு
ஹங்கேரியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஹங்கேரியின் மொஸ்செக் பகுதியில், பேருந்தொன்று சாலையிலிருந்து விலகிச் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 57 பயணிகள் இருந்ததாகவும் கூறுப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.




