இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் சிக்கிய மூவர் பலி!! பலர் மாயம்!
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி குறைந்தது மூன்று மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறைந்தது 10 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வெடிப்பு ஏற்பட்ட நேரத்தில் மலையில் இருந்ததாக நம்பப்படும் குறைந்தது 20 மலையேறுபவர்களை மீட்க அவசர மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாயமானவர்கள் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரும் சிங்கப்பூர் நாட்டவர்கள் என்று நம்பப்படுகிறது, இருப்பினும் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஹல்மஹேரா தீவில் அமைந்துள்ள டுகோனோ எரிமலை நேற்று முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




