கோதுமை, சோயாபீன்ஸை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய தயாராகும் அமெரிக்கா?
அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளுக்கு ஈரான் விரைவில் ஒரு புதிய சந்தையாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உணவுப் பற்றாக்குறையால் அந்நாடு தவித்து வருவதால், கோதுமை, சோயாபீன்ஸ் மற்றும் மக்காச்சோளத்தை கொள்வனவு செய்வதற்கு ஈரானிய நிதியை அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க விவசாயிகளுடனான கலந்துரையாடலில் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார்.
ஈரான் உணவுப் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், தெஹ்ரான் இந்தக் கூற்றை உடனடியாக நிராகரித்தது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், (Mohammad Bagher Ghalibaf) ட்ரம்ப் முடிந்த பேச்சுக்களையும், முறிந்த வாக்குறுதிகளையும் வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.




