இலங்கை கல்வி முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கான அனுமதியைக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவ்விண்ணப்பத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், பார்வையிடுவதற்கான அனுமதியை இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, திட்டமிட்டபடி நாளை மறுதினம் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி புதைகுழிப் பகுதிக்குச் சென்று கள நிலவரங்களைப் பார்வையிடவுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்