பொறுமை இழந்தது ஈரான் – பொங்கி எழுந்து எச்சரிக்கை
அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் Mohammad Bagher Ghalibaf எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூலோபாய ரீதியாக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதி ஈரானின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே இயங்கும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீணான மிரட்டல்கள் அமெரிக்காவை மேலும் சிக்கலில் தள்ளும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான்மீது அமெரிக்கா இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலேயே, இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.




