உலகம் செய்தி

உடனடி போர் நிறுத்தம்: ரஷ்யா, சீனா கூட்டாக வலியுறுத்து!

  • April 6, 2026
  • 0 Comments

மேற்காசிய போர்ச்சூழல் சூழல் மற்றும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சீனா மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான இவ்விரு நாடுகளும், இந்தப் பிரச்சனையில் நேர்மையான மற்றும் சமநிலையான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்யவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் உடனடி போர்நிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். […]

செய்தி விளையாட்டு

ஈரானின் கோரிக்கையை ஏற்குமா FIFA?

  • April 6, 2026
  • 0 Comments

2026 கால்பந்து உலகக்கிண்ண தொடரில் ஈரான் அணி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்காவில் தமது அணி பங்கேற்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்தே இதற்குரிய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை FIFA ஏற்றால் மட்டுமே தமது அணி உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருப்பதாகக் கருதும் ஈரான், வீரர்களின் பாதுகாப்பு குறித்த உறுதியான […]

விளையாட்டு

தொடர் தோல்விகளால் திண்டாடும் CSK!

  • April 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் சென்னை அணி மண்கவ்வியுள்ளது. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் அவ்வணி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றது. சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அணியை விளாசித்தள்ளி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் Royal Challengers Bangalore (RCB) மற்றும் chennai super kings (CSK) அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிஎஸ்கே தலைவர் Ruturaj Gaikwad பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கமைய துடுப்பெடுத்தாடிய RCB. அணி, […]

இலங்கை செய்தி

இலங்கையில் எகிறும் வாழ்க்கைச் செலவு!

  • April 6, 2026
  • 0 Comments

இலங்கையில் நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய லிற்றோ LITRO மற்றும் லாப்ஸ் LAUGFS கேஸ் நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளன. இதற்கமைய 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,765 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,5 கிலோ லிற்றோ எரிவாயு விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1910 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 2.3 […]

உலகம் செய்தி

தொடரும் போர்: உயிரிழப்புகள் அதிகரிப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான்மீது போர் தொடுத்தன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. இப்போரால் எரிபொருள் நெருக்கடி மட்டுமல்ல உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், அமெரிக்க தாக்குதல்களில் ஈரானில் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. ஈரான் மற்றும் லெபனானிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. லேபனானில் மாத்திரம் 1,345 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: பிரிட்டனில் விசேட பாதுகாப்பு கூட்டம்!

  • April 2, 2026
  • 0 Comments

பிரிட்டனில் அடுத்த வாரம் விசேட உயர்மட்ட பாதுகாப்பு கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் Strait of Hormuz கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது. பாதுகாப்பு தரப்பில் உள்ள பிரதானிகள், பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். வேளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்ற நிலையிலேயே அடுத்து பாதுகாப்பு கூட்டம் நடத்தப்படும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி பாதுகாப்பு கூட்டம் பிராந்தியத்தில் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: ஐ.நா. விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • April 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் UN Secretary-General Antonio Guterres அவசர கோரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மோதலால் ஏற்படும் கடுமையான பொருளாதார பாதிப்புகள் மற்றும் மக்களின் சொல்லொணாத் துயரங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் கடும் கவலை வெளியிட்டுள்ளார். அதேவேளை, அமைதியை நிலைநாட்ட […]

உலகம் செய்தி

ராணுவ நடவடிக்கை: வான்வெளியை பயன்படுத்த Austria தடை! அமெரிக்கா கொதிப்பு!

  • April 2, 2026
  • 0 Comments

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காகத் தமது வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையை Austria நிராகரித்துள்ளது. தமது நாட்டின் நடுநிலைத்தன்மைக் கொள்கையைப் பின்பற்றி ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தனது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் தடை விதித்துள்ளதுடன், இத்தாலியும் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையிலேயே ஆஸ்திரியாவும் Austria இந்த முடிவை எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் இந்த ராணுவ முயற்சிகளுக்குத் தங்களது ஆதரவை வழங்க மறுப்பதையும், தன்னாட்சி முடிவுகளை […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: IMF குழுவுக்கு அநுர விளக்கம்!

  • April 2, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே ஐ.எம்.பி. குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர். இதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து […]

உலகம் செய்தி

ராணுவ தளத்தை தாக்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 2, 2026
  • 0 Comments

ஈரானில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற போராட்டங்களின் போது ராணுவ தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமீர்ஹொசைன் ஹதாமி Amirhossein Hatami என்ற குறித்த நபர், அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியதோடு பாதுகாப்புப் படையினருக்கு எதிராகச் செயல்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மீறியதற்காக அவர் மீது இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானின் நீதித்துறை மற்றும் ஊடகங்கள் இந்த […]