சுவிட்ஸர்லாந்திற்கு சுற்றுலாச் சென்ற பேருந்து விபத்து – 05 பேர் பலி
சுவிட்ஸர்லாந்தில் முதியவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 45 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள கிராபுண்டன் Graubünden மாகாணத்தில், சுஷ் மற்றும் செர்னெஸ் Zernez கிராமங்களுக்கு இடையே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்தால் தாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியும் பேரழிவும் அடைந்துள்ளதாக சுற்றுலா நிறுவனமான ஓட் (Oad) தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், டச்சு வெளியுறவு […]













