மோடியின் அழைப்பை புடினிடம் கையளித்தார் ஜெய்சங்கர்
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு ‘X’ பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், “ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். […]













