விளையாட்டு

தொடர்கிறது வெற்றிநடை: முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!

  • April 17, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் Punjab Kings அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் Mumbai Indians அணி தனது 4-வது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 […]

உலகம் செய்தி

இஸ்ரேல் மக்கள் அதிருப்தி!லெபனானில் கொண்டாட்டம்!!

  • April 17, 2026
  • 0 Comments

லெபனான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் திடீரென ஏற்றுக்கொண்டது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்குச் சற்று முன்பாகக்கூட, வடக்கு இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதால் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு மக்கள் சந்தேகத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்க்கிறார்கள். இந்த உடன்படிக்கை தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிரானது என்றும், இது எல்லையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தராது என்றும் அவர்கள் […]

இலங்கை

கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை

  • April 17, 2026
  • 0 Comments

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிய மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்போது வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் அவ்வாறான வாகனங்களைக் பொலிஸார் பொறுப்பேற்பார்கள் என்றும் டபிள்யூ. பி. […]

உலகம் செய்தி

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் நம்பிக்கை!

  • April 17, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்குவரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Donald Trump மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் மீண்டும் அமைதி பேச்சை தொடங்கி வைப்பதற்கு பாகிஸ்தான் தீவிரம் காட்டிவருகின்றது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. எனவே, புதிய […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு ‘ஐஸ்’ வைத்த லெபனான் ஜனாதிபதி!

  • April 16, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் பதற்றத்தைத் தணித்து போர்நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு லெபனான் ஜனாதிபதி Joseph Aoun நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இவ்வாறு நன்றி கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, லெபனானில் நிலையான அமைதியை நிலைநாட்ட விரும்புவதாக இதன்போது ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த லெபனான் ஜனாதிபதி, இதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் […]

இந்தியா

தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

  • April 16, 2026
  • 0 Comments

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைமூலம் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தொகுதி மறுவரையறை சட்டமூலம் 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் முன்வைத்தார். இச்சட்டமூலத்துக்கு தமிழக அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மேற்படி சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் […]

இலங்கை செய்தி

அன்னை பூபதிக்கு தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

  • April 16, 2026
  • 0 Comments

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது. இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து […]

உலகம் செய்தி

ஈரானின் மிக முக்கிய இலக்குகளை தாக்குவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை!

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது ஈரான் இணக்கத்துக்குவர தவறும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நடவடிக்கையின்போது தாக்காத மிக முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு இஸ்ரேல் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எதிர்காலம் தற்போது அதன் கைகளிலேயே உள்ளது எனவும், தவறான முடிவை எடுத்தால் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரித்துள்ளார்.

செய்தி விளையாட்டு

அமெரிக்காவில் களமிறங்கும் ஈரான் வீரர்கள்?

  • April 16, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதற்கு ஈரான் அணி அமெரிக்கா வரும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிகோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் ஈரான் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும், அவர்கள் திட்டமிட்டபடி அமெரிக்காவிற்குப் பயணம் செய்வார்கள் என்றும் FIFA தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உளவாளிகள் நால்வரை கைது செய்தது ஈரான்!

  • April 16, 2026
  • 0 Comments

ஈரான் கிலான் மாகாணத்தில், இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை புரட்சிகர காவல் படை கைது செய்துள்ளது. ஈரானின் முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இடங்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து இணையம் வழியாக கைதான சந்தேகநபர்கள், இஸ்ரேல் அதிகாரிகளுக்கு பகிர்ந்துள்ளனர். எனினும், ஈரான் உளவுத்துறையினரின் தீவிர கண்காணிப்பின் மூலம் இந்த உளவு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. போர்ச் சூழலுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டனர் […]