ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : இந்தியாவிலும் உணரப்பட்டது
ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிர தன்மை காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இரவு 7.04 மணிக்கு ஏற்பட்டது என்றும், இது பூமிக்கு அடியில் 215 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இதற்கிடையே நேற்றில் இருந்து பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குறைந்தது ஐந்து மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து இந்த பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




