உலகம்

ட்ரோனுடன் மோத இருந்த விமானம் – மயிரிழையில் தப்பிய பயணிகள்

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ட்ரோன் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.

போயிங்  737 என்ற விமானம் நியூவர்க் லிபர்ட்டி (Newark Liberty) சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது   ட்ரோன் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

விமானம் தரையிறங்கும்போது சுமார் 106 பயணிகள் மற்றும் 05 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விபரித்த விமானி, தங்கள் விமானத்திற்குக் கீழே சுமார் 100 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த, ஏறத்தாழ மூன்று அடி அகலமுள்ள வட்ட வடிவ ட்ரோன் மீது மோதவிருந்ததாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் விமான நிலையங்களில் ட்ரோன்களின் ஊடுருவல் அதிகரித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்