அமெரிக்காவில் களமிறங்கும் ஈரான் வீரர்கள்?
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதற்கு ஈரான் அணி அமெரிக்கா வரும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிகோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் ஈரான் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும், அவர்கள் திட்டமிட்டபடி அமெரிக்காவிற்குப் பயணம் செய்வார்கள் என்றும் FIFA தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.





