இலங்கை

சுட்டெரிக்கும் வெயில்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கையின் பல பாகங்களில் இன்று (26) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், தேவையற்ற கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக […]

இலங்கை செய்தி

மீண்டும் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவீடு!

  • March 22, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை (23) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபை எச்சரித்துள்ளது.

இலங்கை

கொழும்பில் Parking Free!

  • March 18, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர எல்லைக்குள் நுழையும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கொழும்பில் இனி வாகனங்களை நிறுத்துவதற்கு தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது. உலகளவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 18, 2026
  • 0 Comments

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலிலிருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்- நுழைவு விசாக்கள் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படவுள்ளது. இதேவேளை, இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நன்கொடை!

  • March 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இந்த 10 ஹெலிகொப்டர்களும் கடந்த மார்ச் 15ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஹெலிகொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தூதுவர் மஹிந்த சமரசிங்க, […]

அரசியல் இலங்கை

வாக்குமூலம் வழங்கிவிட்டு வெளியேறிய கோட்டாபய!

  • March 17, 2026
  • 0 Comments

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று (17) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இலங்கை

போர் பதற்றம் : மீண்டும் QR முறைமை!

  • March 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு QR Code முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில்,   https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த […]

இலங்கை

இலங்கையில் ஆயுதங்களுடன் சிக்கிய படகு!

  • March 10, 2026
  • 0 Comments

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 5, 2026
  • 0 Comments

கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள் படிவத்தை’ (Google Form) பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் தொடர்புகளைப் பேணுவதற்கும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், மக்கள் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்குமே இந்தத் தரவு சேகரிப்பு நடத்தப்படுகிறது. தற்போதைய பிராந்திய பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

error: Content is protected !!